search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்
    X

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் டெல்டா மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. #GajaCyclone
    சேலம்:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, போர்வை, வாட்டர் பாட்டில், பால் பவுடர், கொசுவர்த்தி போன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்களை மாநில கொள்கை பரப்பு செயலாளர் உலகநம்பி தலைமையில் டெல்டா மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அரிய லூரில் நடைபெறும் த.மா.கா 5-ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு 5 தீபஜோதியுடன் நிர்வாகிகள் சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில இணைச்செயலாளர் சின்னத்துரை, மகளிரணி மாநில பொது செயலாளர் சங்கீதா, மாநகர பொது செயலாளர் ஆட்டோ தயாளன், சக்தி மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர். #GajaCyclone
    Next Story
    ×