என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.40 லட்சம் நிவாரண பொருட்கள்- அமைச்சர் செல்லூர் ராஜூ
Byமாலை மலர்1 Dec 2018 2:09 PM GMT (Updated: 1 Dec 2018 2:09 PM GMT)
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று அனுப்பி வைத்தார். #ADMK #kadamburRaju
மதுரை:
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை உலுக்கி எடுத்த கஜா புயல் பாதிப்புக்கு புதுக்கோட்டை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வீடு மற்றும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களுக்கு உதவும் வகையில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் பணியாற்றி வருகிறது.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக உணவு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர்ராஜூ ரூ. 40 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை சேகரித்து 5 வாகனங்களில் இன்று தஞ்சை மற்றும் திருவாருர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, திரவியம், எம்.எஸ்.பாண்டியன், நிர்வாகிகள் சோலைராஜா, பரவை ராஜா, முத்துராமலிங்கம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பிரிட்டோ, தமிழ்செல்வன், அரவிந்தன், ஜெயரீகன், கே.வி.கே. கண்ணன், பார்த்திபன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK #KadamburRaju
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை உலுக்கி எடுத்த கஜா புயல் பாதிப்புக்கு புதுக்கோட்டை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வீடு மற்றும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களுக்கு உதவும் வகையில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் பணியாற்றி வருகிறது.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக உணவு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர்ராஜூ ரூ. 40 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை சேகரித்து 5 வாகனங்களில் இன்று தஞ்சை மற்றும் திருவாருர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, திரவியம், எம்.எஸ்.பாண்டியன், நிர்வாகிகள் சோலைராஜா, பரவை ராஜா, முத்துராமலிங்கம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பிரிட்டோ, தமிழ்செல்வன், அரவிந்தன், ஜெயரீகன், கே.வி.கே. கண்ணன், பார்த்திபன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK #KadamburRaju
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X