search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raina"

    • ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன்.
    • டோனி ரெய்னா மட்டும் இடையே வரலனா அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.

    ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தடுத்து நடக்கவுள்ளது. இதில் விளையாடும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திற்காக ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

    இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இருதரப்பு தொடரில் இஷாந்த் சர்மா மோசமான கெட்ட வார்த்தையால் தம்மை திட்டியதாக கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இஷாந்த் சர்மா என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். குறிப்பாக ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன். இங்கே நான் உண்மையாக பேசுகிறேன். அந்தப் போட்டியை தொடர்ந்து அகமதாபாத் நகரில் அடுத்த நாள் நடைபெற இருந்த டி20 போட்டிக்காக நாங்கள் விமானத்தில் பயணம் மேற்கொண்டோம். அப்போது நான் விராட் கோலி, சோயப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தோம். அந்த சமயத்தில் எங்கள் இருவருக்குமிடையே உண்மையாக என்ன நடந்தது என சிலர் கேட்டனர்.

    அப்போது அங்கிருந்த இஷாந்த் சர்மா என்னிடம் கெட்ட வார்த்தை பேசியதாக அவர்களிடம் சொன்னார். அதற்கு நீங்கள் திரும்ப வாங்கிக்கொண்ட கெட்ட வார்த்தைகளுக்கு தகுதியானவர் தான் என்று அவர்கள் அவரிடம் சொன்னார்கள். அந்தளவுக்கு அது மோசமான தருணமாக அமைந்தது. இருப்பினும் டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இடையே வந்தனர். அவர்களுக்கு யார் மீது தவறு இருந்தது என்று தெரிந்த காரணத்தால் உடனடியாக நிலைமையை சமாளித்தனர். இல்லையெனில் அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.

    குறிப்பாக எனக்கு 2 போட்டிகள் தடையுடன் 5 போட்டிகளுக்கான சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும். அந்தளவுக்கு அந்த தருணம் மோசமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர்க கிங்ஸ் அதிரடி வீரர் ரெய்னா சாதனைகள் படைத்துள்ளார். #IPL2018 #Raina
    ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர்க கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது. இதற்கு முக்கிய காரணம் சுரேஷ் ரெய்னாதான். அவர் 35 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்தார்.

    இதன்மூலம் இந்த சீசனில் 10 ஆட்டங்களில் 3 அரைசதத்துடன் 313 ரன்கள் குவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா ஐபிஎல் டி20 லீக் தொடங்கிய காலத்தில் இருந்தே விளையாடி வருகிறார். 11-வது சீசனில் விளையாடிடும் ரெய்னா, ஒவ்வொரு சீசனிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துள்ளார். எந்த பேட்ஸ்மேனும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.



    அத்துடன் ஜடேஜா பந்தில் ரகானே ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த கேட்சை பிடித்ததன் மூலம் ஒரே பந்து வீச்சாளருக்காக அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் பந்து வீசும்போது 16 முறை கேட்ச் பிடித்து பொல்லார்டு முதல் இடத்தில் உள்ளார். ரெய்னா பிராவோ மற்றும் ஜடேஜா ஆகியோர் பந்து வீச்சில் தலா 12 கேட்ச் பிடித்துள்ளார். சாஹல் பந்து வீச்சில் ஏபி டி வில்லியர்ஸ் 11 கேட்ச் பிடித்து 3-வது இடத்தில் உள்ளார்.
    ×