search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rahul Johri"

    மீடூ பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ராகுல் ஜோர ஐசிசி கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து விலகியுள்ளார். #MeToo #BCCI
    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி. கிரிக்கெட் வாரியத்துக்கு வருவதற்கு முன்பு இவர் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றினார். இந்த நிலையில் ராகுல் ஜோரி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் ‘மீடூ’ ஹேஸ்டேக்கில் குற்றம்சாட்டி இருந்தார்.

    இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவரிடம் 1 வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டது. அவர் அதற்கு மேலும் கால அவகாசம் கேட்டு இருந்தார். இதனால் ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறியிருந்தார்.



    இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டம் வருகிற 17 மற்றும் 18-ந்தேதியில் சிங்கப்பூரில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் ஜோரி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதால் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு பதிலாக கிரிக்கெட் வாரிய செயலாளர் அமிதாப் சவுத்ரி கலந்து கொள்ள இருக்கிறார்.
    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் ஒருவாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாக குழு உத்தரவிட்டுள்ளது. #BCCI #RahulJohri
    புதுடெல்லி :

    வேலை பார்க்கும் இடங்களிலும் , பிற இடங்களிலும் ஆண்களால் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீப காலமாக பெண்கள் தைரியமாக புகார் கூறி வருகின்றனர். சர்வதேச அளவில் ‘மிடூ’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கடந்த சில நாட்களாக இப்படிப்பட்ட புகார்கள் குவிந்து வருகின்றன.

    இதில் சினிமாத்துறையில் பணியாற்றும் ஏராளமான பெண்கள் ‘மிடூ’ என்ற பெயரில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து வருகின்றனர். எனினும் அரசியல் துறையையும் இது விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பரும் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் துறையிலும் முதல் மிடூ குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

    ராகுல் ஜோரி பிசிசிஐ தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2016-ஏப்ரல் முதல் பணியாற்றி வருகிறார். அவர் மீது பத்திரிகையில் பணியாற்றும் பெண் ஒருவர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அடையாளத்தை வெளிபடுத்தாத அந்த பெண், ராகுல் ஜோரியும், இவரும் வெவ்வேறு ஊடக நிறுவனங்களுக்கு வேலை செய்தபோது நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் குறிபிட்டு உள்ளார்.  

    ராகுல் ஜோரி தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். பிசிசிஐ நிர்வாகி மீது பாலியல் புகார் எழுந்ததுள்ள சம்பவம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஒருவாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாக குழு ராகுல் ஜோரிக்கு உத்தரவிட்டுள்ளது. #BCCI #RahulJohri
    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ராகுல் ஜோரி மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #RahulJohri #metoo

    மும்பை:

    பெண்கள் மீதான பாலியல் தொல்லை குறித்த புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    ‘மீ டூ’ என்ற டுவிட்டர் பக்கத்தில் பிரபலங்கள் மீது பெண்கள் பலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி வருகிறார்கள்.

    பிரபல இந்தி நடிகர் நானேபடேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா அளித்த புகாரை அடுத்து பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வருகிறார்கள்.

    நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மீது புகார்கள் கூறப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இலங்கை கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ரணதுங்கா, மலிங்கா ஆகியோர் மீதும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியான ராகுல்ஜோரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் மீ டூ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    அதில் ராகுல்ஜோரியை வேலைவாய்ப்பு வி‌ஷயமாக சந்தித்தபோது அவர் பாலியல் ரீதியாக பேசி அழைத்தார் என்று தெரிவித்துள்ளார். புகார் கூறிய பெண்ணின் பெயர் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    ராகுல்ஜோரி 2016-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அதற்கு முன்பு அவர் பிரபல நெட்வொர்க் நிறுவனத்தில் துணைத் தலைவராக வேலை பார்த்து வந்தார். #RahulJohri #metoo

    ×