search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Welfare Workers"

    • ராமநாதபுரத்தில் மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • விரும்பிய இடத்திலோ யே பணியிடமாறுதல்வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்க தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் மனு அளித்தனர்.

    இந்த மனுவில் கடந்த 33 ஆண்டு காலமாக எங்களை பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடர்ந்து மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்டோம். 3-வது முறையாக 2015 அன்று முதல் அமைச்சர் கலைஞர் சட்டமன்றத்தில் அறிவித்த வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் மக்கள் நலப்பணியாளர்களாக பணி செய்தோம். ஆனால் இதுநாள்வரை எவ்வித பணி நியமன ஆணையும் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

    மேலும் 2009-ம் ஆண்டு முதல் எங்களுக்கு வழங்க வேண்டிய காலை முறை ஊதியத்தை கணக் கிட்டு வழங்க வேண்டும். முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல இறந்த பணியாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோன்று இறந்த பணியாளர்களின் வரிசுகளுக்கு இதுவரை பணி வழங்கப்படவில்லை. ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள காலி பணியிடங்களில் மக்கள் நலப்பணியாளர்களை விரும்பிய இடத்திலோயே பணியிடமாறுதல்வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • செஞ்சியில் மக்கள் நல பணியாளர்கள், ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்றார்.
    • புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஏரி பாசன சங்க நிர்வாகிகளுக்குஅமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மக்கள் நல பணியாளர்கள் மற்றும் ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார் .சிறுபான்மையினர் நலத் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதியதாக பணியில் அமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஏரி பாசன சங்க நிர்வாகிகளுக்குஅமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து அவர் களுடைய பணிகள் குறித்து விளக்கிப் பேசினார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் .கேசவலு வரவேற்றார் இதில்செஞ்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன் ஒன்றிய செயலாளர்கள் செஞ்சிவி ஜயராகவ ன்மேல்மலையனூர் நெடுஞ்செழியன், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்மந்தம் மற்றும்ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள்மக்கள் நல பணியாளர்கள் மற்றும் ஏரி நீர் பாசன சங்க தலைவர்கள் இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    • மயிலம் யூனியன் அலுவலகத்தில் மக்கள் நல பணியாளர்கள் பணியில் சேருவதற்கான விருப்பமனு அளிக்கப்பட்டது,
    • விழுப்புரம் மாவட்டத்தில் முன்னதாக பணியில் இருந்த மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் பணியில் சேருவதற்கான விருப்ப மனுவை அளித்து வருகின்றனர்

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    கடலூர் மாவட்டத்தில் 29,934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,718 பேரும், மாணவிகள் 15,216 பேர் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவில் 27,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 13,275 பேரும், மாணவிகள் 14,509 பேரும் தேர்வாகி உள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.82 சதவீதமாகும்.

    கடலூர் மாவட்டத்தில் 108 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 12,765 பேர் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவில் 11,325 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.72 சதவீதமாகும்.

    • இன்று முதல் வருகிற 18-ந்தேதிக்குள் விருப்ப கடிதம் வழங்க வேண்டும்.
    • காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்க படாது.

    நெல்லை மாவட்ட ஆட்சியிர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மக்கள் நல பணியாளர்களை தற்போது அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணி ஒருங்கிணைப்பாளராக வேலையில் ஈடுபட அரசு வாய்ப்பளித்துள்ளது.

    இந்த பணிக்காக தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம், கூடுதலாக கிராம ஊராட்சி பணிகளுக்காக ரூ.2,500 ஆக மொத்தம் ரூ.7,500 மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    எனவே 8.11.2011 அன்று பணி இழந்த, புதிய பணியில் சேர விருப்பம் உள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள், தாங்கள் ஏற்கனவே வேலை செய்த யூனியனில் வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ள வேண்டும்.

    ஏற்கனவே பணிபுரிந்ததற்கான விவரத்துடன், புதிய பணியில் சேருவதற்கான விருப்ப கடிதத்தையும் வழங்க வேண்டும். இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 18-ந்தேதிக்குள் (சனிக்கிழமை) விருப்ப கடிதம் வழங்க வேண்டும்.

    அவர்களது விருப்ப கடிதம் பரிசீலிக்கப்பட்டு வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்க படாது.

    எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி 18-ந்தேதிக்குள் விண்ணப்பித்து இந்த பணி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஒவ்வொரு ஊராட்சியிலும் 5,000 ரூபாய் மாத சம்பளம் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பெரும்பாலான ஊராட்சிகளில் மக்கள் பணியாளர், புதிய பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    மக்கள் நலப்பணியாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு, வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சியில் வசிக்க வேண்டும். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த 50 வயதுக்கு உட்பட்ட, கம்ப்யூட்டர் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள புத்தக காப்பாளர், சமுதாய வல்லுனர், மக்கள் நலப்பணியாளர் ஆகியோருக்கு இப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு ஊராட்சியிலும் 5,000 ரூபாய் மாத சம்பளம் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    மக்கள் நலப்பணியாளராக பணியாற்றியவர், பணி ஒருங்கிணைப்பாளராக விண்ணப்பிக்கும் போது 'முந்தைய மக்கள் நலப்பணியாளர் பணிக்கான, பணிக்கால உரிமை மற்றும் முந்தைய பணிக்கால உரிமை தொகை ஏதும் கோரமாட்டேன் என்ற சம்மத கடிதம் பெற்ற பிறகு பணியில் அமர்த்த பி.டி.ஓ.,க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பழைய மக்கள் நலப்பணியாளர் விவரம் நிபந்தனைக்கு உட்பட்டு தற்போது பணியில் ஈடுபடுவது, சம்மத கடிதம் அளிப்பது போன்ற பணிகளை கவனிக்க, ஒன்றியம் தோறும் உதவி இயக்குனர் நிலையில் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, பெரும்பாலான ஊராட்சிகளில் மக்கள் பணியாளர், புதிய பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே6,000 ரூபாய் மாத சம்பளத்தில் பணியாற்றினோம்.மக்கள் நல பணியாளருக்கு மட்டும் 7,500 ரூபாய் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். புதிய பணியில் சேரவே விரும்புகிறோம். பணியில் இணைந்த போது தேவையான கோரிக்கையை முதல்வரிடம் முன்வைப்போம் என்றார்.

    ×