search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prabhu MLA"

    கள்ளக்குறிச்சி பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலகங்களை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என பிரபு எம்எல்ஏ கூறியுள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் விழுப்புரத்தில் பிரபு எம்.எல்.ஏ. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    மாவட்ட எல்லைகள் வரையறை குறித்து தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலம் உள்பட பல்வேறு துறைகளின் மாவட்ட அலுவலகங்கள் உளுந்தூர்பேட்டை அருகே அமைய உள்ளதாக தெரியவருகிறது.

    குமரகுரு எம்.எல்.ஏ. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அலுவலகங்களை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருவதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    எனவே கள்ளக்குறிச்சி பகுதியில் 5 முதல் 10 கி.மீ தூரத்திற்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலகங்களை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வேன். நான் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எனவே தமிழக அரசு கள்ளக்குறிச்சி பகுதியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு துறைகளின் மாவட்ட அலுவலகங்களை கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு பிரபு எம்.எல்.ஏ. கூறினார். #tamilnews
    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா? என்ற கேள்விக்கு கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பிரபு பதில் அளித்துள்ளார். #PrabhuMLA #ADMK
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபு.

    இவர் கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். இதையடுத்து அவர் அ.ம.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளராக இருந்து வருகிறார். இவர் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. தொடர்ந்து எம்.எல்.ஏ. ஆக உள்ளார்.

    இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்ததை போல், பிரபு எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இணையப்போவதாக சமூக வலைதளங்களிலும், கட்சியினர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக பிரபு எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக நான் அ.தி.மு.க.வில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.

    நான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உண்மையான விசுவாசியாகவும், தொண்டனாகவும் செயலாற்றுவேன். அணி மாறப்போவதாக வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.


    அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளராக சசிகலா, துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் எப்போது ஆகிறார்களோ அப்போது தான் அ.தி.மு.க.வும்- அ.ம.மு.க.வும் இணையும்.

    ஜெயலலிதாவின் எண்ணம் ஈடேற வேண்டும் என்றால் இந்த ஆட்சியும், கட்சியும் சசிகலாவிடம் வந்தால் தான் அது முடியும். அதுவரை நான் அயராது உழைத்து இந்த இயக்கத்தை வலுப்படுத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #PrabhuMLA #ADMK
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படவும் இல்லை பேசவும் இல்லை என்று கலைச்செல்வன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #KalaiselvanMLA #ADMK #Kalaiselvan
    விருத்தாசலம்:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பிரபு (கள்ளக்குறிச்சி), ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் முதல்-அமைச்சருக்கு எதிராக பேசி வருவதாக கூறப்படுகிறது.

    இதையொட்டி அந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து கலைச்செல்வன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சபாநாயகரிடமிருந்து எனக்கு நோட்டீஸ் வரவில்லை. நோட்டீஸ் வந்தபிறகு அதுகுறித்து நான் பதில் சொல்கிறேன். நான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.தான். இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன்.

    சின்னம்மா சசிகலா தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்.

    இதுதொடர்பாகவும், இரட்டை இலை சின்னம் சம்பந்தமாகவும் கோர்ட்டில் வழக்கு உள்ளது. அதில் ஒரு முடிவு வரட்டும்.

    நான் முதல்- அமைச்சருக்கு எதிராக செயல்படவில்லை. கூட்டத்தில் முதல்- அமைச்சருக்கும் எதிராகவும் நான் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இதுதொடர்பாக பிரபு எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இதுவரை எந்த நோட்டீசும் எனக்கு வரவில்லை. அப்படி வந்தால் அதை சட்டப்படி எதிர் கொள்வேன். நான் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன்.

    இந்தநிலையில் நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறேன் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.

    இந்த ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் எண்ணம் எப்படி பட்டது என்று அனைவருக்கும் தெரிந்ததே.

    இவ்வாறு அவர் கூறினார். #KalaiselvanMLA #ADMK #Kalaiselvan
    ×