search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pedro Sanchez"

    • ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல பிரதமர் பெட்ரோ சான்செஸ் திட்டமிட்டார்.
    • விமானம் மீண்டும் மாட்ரிட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    மாட்ரிட்:

    ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவழிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸ் (வயது 52) விரும்பினார்.

    அதன்படி ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல அவர் திட்டமிட்டார். இதற்காக தலைநகர் மாட்ரிட்டில் இருந்து சிறிய ரக விமானம் மூலம் அவர் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டார்.

    ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

    இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் மாட்ரிட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக நின்று கொண்டிருந்த மீட்பு படையினர் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் அவர்கள் டோனானா தேசிய பூங்காவுக்கு சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. எனினும் அதிர்ஷ்டவசமாக பிரதமர் தனது குடும்பத்தினருடன் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறால் விமானத்தின் என்ஜின் செயலிழந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் பணிகளை கவனிக்க போவதாக தகவல்.
    • அனைத்து நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.

    மேட்ரிட்:

    ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் பணிகளை கவனிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

    நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று நாடு திரும்பிய நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்பெயின் நாட்டில் 60 வயதை கடந்தவர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு 4-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

    ஸ்பெய்ன் பிரதமராக இருந்த மரியான ரஜாய் பதவி விலகியதை அடுத்து பெட்ரோ சான்சஸ் அந்நாட்டின் புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டார். #SpainPM #PedroSanchez
    மாட்ரிட் :

    ஸ்பெயின் நாட்டின் பிரதமராக மரியானா ரஜாய் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவரது கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரஜாய் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மரியானா ரஜாய் தோல்வியடைந்தார். இதனால் ரஜாய் பதவி விலகினார்.

    இதனை அடுத்து, பெட்ரோ சான்செஸ் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அவருக்கு ஆதரவாக 180 பேரும், எதிராக 169 பேரும் வாக்களித்தனர். பெட்ரோ சான்செஸ் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதால் சான்செஸ் பிரதமாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், ஸ்பெய்ன் பிரதமராக பெட்ரோ சான்செஸ், மன்னர் ஃபெலிப் முன்னிலையில் இன்று பதவியேற்றுக்கொண்டார். வழக்கம்போல பைபில் அல்லது க்ரூசிஃபிஸ் மீது ஆணையிட்டு பதவியேற்காமல் முதல் முறையாக அரசியலைமைப்பு சட்டத்தின் மீது ஆணையிட்டு பெட்ரோ பிரதமராக பதவியேற்றுள்ளார்.

    வரும் 2020-ம் ஆண்டு வரை பெட்ரோ சான்சஸ் ஸ்பெய்ன் பிரதமராக பதவி வகிப்பார். அந்நாட்டிற்கு பிரதமராக பதவியேற்ற 7-வது நபர் பெட்ரோ சான்சஸ் என்பது குறிப்பிடத்தக்கது. #SpainPM #PedroSanchez
    ஸ்பெயின் பாராளுமன்றத்தில் மரியானா ரஜாய் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்ததை அடுத்து, பெட்ரோ சான்செஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #SpainPM #PedroSanchez

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் பிரதமராக மரியானா ரஜாய் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவரது கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவருக்கு சுமார் 33 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.

    இதையடுத்து, பிரதமர் ஊழலை தடுக்க முடியவில்லை என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதுதொடர்பாக ஸ்பெயின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், ரஜாய் பதவி விலக வேண்டும் எனவும், ரஜாய் பிரதமராக இருப்பது மக்களுக்கு மட்டுமன்றி அவரது கட்சிக்குமே சுமையாக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சான்செஸ் கூறினார்.



    இதனிடையே, ரஜாய் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மரியானா ரஜாய் தோல்வியடைந்தார். இதனால் ரஜாய் பதவி விலகினார்.

    இதனை அடுத்து, பெட்ரோ சான்செஸ் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அவருக்கு ஆதரவாக 180 பேரும், எதிராக 169 பேரும் வாக்களித்தனர். பெட்ரோ சான்செஸ் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சான்செஸ் பிரதமாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
     #SpainPM #PedroSanchez
    ×