என் மலர்
செய்திகள்

ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமராக பெட்ரோ சான்செஸ் தேர்வு
ஸ்பெயின் பாராளுமன்றத்தில் மரியானா ரஜாய் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்ததை அடுத்து, பெட்ரோ சான்செஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #SpainPM #PedroSanchez
மாட்ரிட்:
ஸ்பெயின் நாட்டின் பிரதமராக மரியானா ரஜாய் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவரது கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவருக்கு சுமார் 33 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் ஊழலை தடுக்க முடியவில்லை என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதுதொடர்பாக ஸ்பெயின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், ரஜாய் பதவி விலக வேண்டும் எனவும், ரஜாய் பிரதமராக இருப்பது மக்களுக்கு மட்டுமன்றி அவரது கட்சிக்குமே சுமையாக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சான்செஸ் கூறினார்.

இதனிடையே, ரஜாய் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மரியானா ரஜாய் தோல்வியடைந்தார். இதனால் ரஜாய் பதவி விலகினார்.
இதனை அடுத்து, பெட்ரோ சான்செஸ் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அவருக்கு ஆதரவாக 180 பேரும், எதிராக 169 பேரும் வாக்களித்தனர். பெட்ரோ சான்செஸ் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சான்செஸ் பிரதமாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
#SpainPM #PedroSanchez
Next Story






