search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Membership"

    • மேலப்பாளையம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனி உதயா நகரில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நெல்லை:

    மேலப்பாளையம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. புதிய உறுப்பி னர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனி உதயா நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். கிழக்கு பகுதி செயலாளர் சண்முக குமார் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்ப ட்டது. கூடுதலாக புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வட்ட செயலாளர்களிடம் வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் எம்.எல்.ஏ. ஆதித்தன், சிறுபான்மை பிரிவு மகபூப் ஜான், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, அண்ணா தொழிற்சங்கம் பொன்னுசாமி, பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், இளைஞர் பாசறை சம்சு சுல்தான், தகவல் தொழில்நுட்ப பிரிவு விக்ணேஷ் மற்றும் பகுதி, வட்ட செயலா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமிற்கு நகர செயலாளர் சந்தைடியூர் மால்ராஜேஷ் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு விருந்தினராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமினை தொடங்கி வைத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி நகர தி.மு.க. சார்பில் நடந்த 'உடன் பிறப்புகளாய் ஒன்றிணைவோம் வா' உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு நகர செயலாளர் சந்தைடியூர் மால்ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    மாநில மகளிரணி பிரசார குழு துணைச் செயலாளர் ஜெஸி பொன்ராணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட பிரதிநிதிகள் ஹீபர்மோசஸ், முபாரக், மணப்பாடு ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பரா மரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமினை தொடங்கி வைத்தார்.

    இதில் முக்காணி கூட்டுறவு சங்கதலைவர் உமரிசங்கர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாள் மகாவிஷ்ணு, மாவட்ட துணை அமைப்பா ளர்கள் வர்த்தக அணி ரவிராஜா, மீனவரணி மெராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜான்பாஸ்கர், சரஸ்வதி பங்காளன், பஷீர், பிரதீப் கண்ணன், மும்தாஜ், சபனா, அன்வர்சலீம், சித்திரை செல்வன், சலீம், கணேசன், சாம்நேஸ், ராஜேந்திரன், முத்துபாண்டி, கணேஷ், நாராயணன், பேரூராட்சி நிர்வாகிகள் அப்துல் ரசாக், தங்கம், திரவியம், மேகநாதன், பிரவீனா, ஹரி, ராஜ்குமார், இஸ்மாயில் இசக்கிமுத்து, கணேசன், நிர்மல்சிங், இசக்கிப்பாண்டி, ஸ்டெல்லா, செண்பகவள்ளி, கிளாட்வின், பைசுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×