search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Cement Road"

    • ரூ. 9.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சிமெண்ட் சாலை திறப்பு விழா நடைபெற்றது.
    • இதில் துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர்கள் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சி ராஜாங்கபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சிமெண்ட் சாலை திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கி சிமெண்ட் சாலையை திறந்து வைத்தார். இதில் துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர்கள் நாகராஜன், சுகிர்தா , ஊராட்சி செயலர் மூக்காண்டி, மற்றும் மாரித்துரை , முப்புடாதி, அழகையா, முருகையா, சுப்பிரமணியன், கணபதி, சீவலமுத்து, குடிநீர் இயக்குபவர் குமார், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு கரிய மாணிக்க பெருமாள் வீதி. வடக்கு மாடவீதி, தெற்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கவுன்சிலர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக துணை மேயர் கே.ஆர்.ராஜு கலந்து கொண்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு கரிய மாணிக்க பெருமாள் வீதி. வடக்கு மாடவீதி, தெற்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கவுன்சிலர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக துணை மேயர் கே.ஆர்.ராஜு கலந்து கொண்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மகேஸ்வரி, உதவி கமிஷனர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் பேரின்பம், கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, அனார்கலி, மாரியப்பன் மற்றும் கோவில் திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் வக்கீல் பாலாஜி, சீனிவாசன் ராம புத்திரன், ஆறுமுகம், நையன்சிங் மற்றும் தி.மு.க. பிரமுகர் அப்துல் சுபஹானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.
    • சாலை 5 மாதத்தில் பெயர்ந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கம்பாய்கடை ஹாப்பிவேலி பகுதியில் சுமார் 400 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் உபயோகித்து வந்த சிமெண்ட் சாலை பழுதடைந்ததால் அதனை சரி செய்து தர வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் மனு மூலமாக கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்திற்கு தெரிவித்தனர்.

    பழுதடைந்த சாலை குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் புதிய சாலை அமைக்க நுழைவு வரி திட்டம் மூலம் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்தனர். அதன் மூலம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.

    5 மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது அந்த சாலையில் சிமெண்ட் மற்றும் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை 5 மாதத்தில் பெயர்ந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தரமற்ற பொருட்களை கொண்டு சாலை அமைக்கப்பட்டதா என்ற கேள்வியும் இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

    • கீழக் கடையம் பகுதியில் புதிய வாருகாலுடன் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
    • திறப்பு விழாவிற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் யூனியன் கீழக் கடையம் ஊராட்சிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலக தெருப்பகுதியில் 15 -வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ .16 லட்சம் மதிப்பில் புதிய வாருகாலுடன் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

    கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விக்டர் சேவியர் துரைசிங் முன்னிலை வகித்தார். கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதில் கடையம் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக டி.கே. பாண்டியன், முகமது உசேன், அழகுதுரை, முருகன், முத்துலட்சுமி ராமதுரை, மாரியப்பன், மாரிசுப்பு, கணேசன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜெயம் நன்றி கூறினார்.

    ×