search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nandhini"

    • கே.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரை சேர்ந்த குணா மனைவி நந்தினி, அதே முகவரியை சேர்ந்த ஆனந்தன் மகள் நிரஞ்சனா ஆகியோர் என்பது தெரியவந்தது.
    • இருவரும் சகோதரிகள். மதுவுக்கு எதிராக நந்தினி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலைய பகுதியில் 2 இளம்பெண்கள் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை அச்சிட்ட நோட்டீஸ்களை விநியோகம் செய்து கொண்டு இருந்தனர்.

    இதையடுத்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார், விரைந்து வந்து நோட்டீஸ் விநியோகம் செய்து வந்த 2 இளம்பெண்களை பிடித்து, அவர்களிடம் இருந்த நோட்டீசை கைப்பற்றி விசாரித்தனர்.

    அதில், மத்திய, மாநில அரசுகளுக்கும், பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து, அவர்களை விசாரணைக்கு அழைத்து செல்ல முயன்றனர்.

    பின்னர், அவர்கள் கோஷங்கள் எழுப்பியதால், இருவரையும் மகளிர் போலீஸ் மூலம் குண்டு கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் மதுரை மாவட்டம் கே.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரை சேர்ந்த குணா மனைவி நந்தினி (29), அதே முகவரியை சேர்ந்த ஆனந்தன் மகள் நிரஞ்சனா (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரும் சகோதரிகள். மதுவுக்கு எதிராக நந்தினி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    டவுன் போலீசார் 151 பிரிவின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நந்தினி மற்றும் நிரஞ்சனாவை கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். இதனால் ஈரோடு பஸ் நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "பொன்னியின் செல்வன்-1".
    • "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தில் பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "பொன்னியின் செல்வன்" வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு வருகிறான் சோழன் என்ற வாசகத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையில் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தில் விக்ரம், ஆதித்ய கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், கார்த்தி, வந்தியத்தேவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் குறிப்பிட்டு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.

    பொன்னியின் செல்வன் - நந்தினி

    பொன்னியின் செல்வன் - நந்தினி

    தொடர்ச்சியாக இப்படத்தின் அறிவிப்புகளை கொடுத்து வரும் படக்குழு தற்போது ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ஐஸ்வர்யா ராய், நந்தினி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக குறிப்பிட்டு ஐஸ்வர்யா ராய்யின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பழிவாங்கும் முகம் அழகானது! பழுவூர் ராணி நந்தினியை சந்திக்கவும்! என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டரை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    அதிக ஊனம் என்ற காரணத்தால் மருத்துவ படிப்பு மறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவி நந்தினிக்கு, நீட் தேர்வு எழுதாவிட்டாலும், மருத்துவம் படிக்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. #SupremeCourt #NEET #Nanthini
    புதுடெல்லி:

    விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி நந்தினி. இவரது லட்சியமான மருத்துவ படிப்புக்கு இவரது உடல் ஊனம் ஒரு தடையாக பார்க்கப்பட்டது. 80 சதவிகிதம் உடல் ஊனம் இருப்பதால் இவருக்கு மருத்துவம் படிப்பதற்கான தகுதி மறுக்கப்பட்டது.

    உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுக்களும் தொடர்ந்து நிராகரிக்கப்படவே, நம்பிக்கை இழக்காத நந்தினி உச்சநீதிமன்றத்தை நாடினார். மருத்துவம் படிக்க தனக்கு அனுமதி வழங்க வேண்டி அவர் அளித்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாணவி நந்தினிக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அவர் நீட் தேர்வு எழுதவில்லை என்றாலும் பரவாயில்லை எனவும், கூடுதல் இடங்களை ஏற்படுத்தியாவது நந்தினிக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. #SupremeCourt #NEET #Nanthini
    ×