search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murder plan"

    • மதுரை திடீர் நகர் பகுதியில் கொலை திட்டத்திற்காக வாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் இரவில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டி–ருந்தனர்.

    மதுரை

    மதுரை திடீர் நகர் போலீசார் இரவில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டி–ருந்தனர். அவர்கள் வக்கீல் தெரு சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது சந்தே–கத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த இரண்டு வாலிபர்களை பிடித்தனர். அவர்கள் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தனர். அந்த வாளை பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட வாலிபர்களி–டம் போலீசார் நடத்திய விசாரணையில் ஹீரா நகர் காளிமுத்து மகன் மூர்த்தி (38), அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் பாலாஜி (23) என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கொலை திட்டத்தில் அந்த பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

    யாரை கொலை செய்ய அவர்கள் பதுங்கி இருந்தார்கள், எதற்காக பதுங்கி இருந்தார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வரு–கின்றனர்.

    அமெரிக்காவில் பார்டோ பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 2 சிறுமிகள் உடன் படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் பார்டோ பகுதியில் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 2 சிறுமிகள் அங்குள்ள பாத்ரூமில் பதுங்கி இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பள்ளி ஊழியர்கள் அவர்களை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் கத்தி இருந்தது.

    அதை தொடர்ந்து 2 சிறுமிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமிகள் மனித ரத்தம் குடிக்க விரும்பினர். அதற்காக கத்தியுடன் வந்த அவர்கள் உடன் படிக்கும் சக மாணவர்களின் குரல்வளையை அறுத்து அவர்களை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்தது. அதன் பின்னர் அவர்களின் சதையை கடித்து தின்ன விரும்பியதாகவும் கூறினர். அதன் பின்னர் தாங்களும் தற்கொலை செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தனர்.
    திலாஸ்பேட்டையில் கொலை திட்டத்துடன் பதுங்கி இருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Murdercase

    புதுச்சேரி:

    புதுவை திலாஸ்பேட்டையை சேர்ந்தவர் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் கோபி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக திலாஸ்பேட்டையை சேர்ந்த ராமு மற்றும் இவரது சகோதரர் ரஞ்சித் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர்.

    தற்போது இவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இவர்களை கொலை செய்ய கோபியின் கூட்டாளிகள் முடிவு செய்திருந்தனர். இதே போல் கோபியின் கூட்டாளிகளை கொலை செய்ய ராமுவின் சகோதரர் ரஞ்சித் திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திலாஸ்பேட்டை மந்தைவெளி திடலில் கத்தியுடன் 4 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருப்பதாக கோரிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல்வந்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த கும்பலில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த புகழ், பிரசாந்த், புவனேஷ் ஆகியோர் என்பதும், தப்பி ஓடியவர் அப்பு என்பதும் தெரிய வந்தது.

    இவர்கள் ரஞ்சித்தின் தூண்டுதலின் பேரில் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் கோபியின் கூட்டாளிகளை கொலை செய்ய கத்தியுடன் பதுங்கி இருந்ததாக தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அப்புவை தேடி வருகிறார்கள். #Murdercase

    ×