search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mohan c lazarus"

    • சமத்துவபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
    • மோகன் சி.லாசரஸ், ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதிநாதபுரம் ஊராட்சி சமத்துவபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பில் நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் புதுவாழ்வு சங்கத்தின் சார்பில் ரூ.13.67 லட்சம் பங்களிப்புடன் புதிய தாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கி னார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரமா, ஆழ்வார்திருநகரி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாக்கியலீலா, நாக ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்று பேசினார். விழாவில் நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ், ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நாலு மாவடி இயேசு விடுவிக் கிறார் ஊழிய சமூக சேவை பொறுப்பாளர் எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன் இசக்கி, மாவட்ட அறங்கா வலர் குழு தலைவர் பார்த்தி பன், தி.மு.க. ஆழ்வை நகர செயலாளர் கோபிநாத், மாவட்ட இளைஞர் காங் கிரஸ் தலைவர் இசை சங்கர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய சீலன், வட்டாரத் தலை வர்கள் ஆழ்வை கோதண்ட ராமன், ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, முன்னாள் நகர தலைவர் பாலசுப்பிர மணியன், ஆதிநாதபுரம் பஞ்சாயத்து தலைவி முத்து மாலை, யூனியன் துணைத் தலைவர் ராஜாத்தி, கராத்தே மாஸ்டர் முத்து, தொடக்கப் பள்ளி ஜான்சன் ஊடக பிரிவு முத்துமணி, தி.மு.க. மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செம்பூர் விஜயன், காங்கிரஸ் நிர்வாகிகள் மோகன்ராஜ், சபாபதி, ராஜ், பால கிருஷ்ணன், குமரன், இசக்கி ராஜா, ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வைத்து 2 ஆயிரம் பேருக்கு மோகன்.சி.லாசரஸ் விருந்து வழங்கினார். #mohanclazarus
    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏழை-எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. 

    இதே போன்று இந்த ஆண்டு  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன். சி. லாசரஸ் தலைமை வகித்தார். நாலுமாவடி சேகர குரு மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்தார். 

    நாலுமாவடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள ஏழை -எளிய மக்கள் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டன.  ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வகுமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.  #mohanclazarus
    சென்னையில் இந்தியாவின் நம்பிக்கை, வேதம் என்ற தலைப்பில் கூட்டத்தில் பேசிய சில வார்த்தைகளை மட்டும் வைத்து திரித்து அதை வெளியிட்டுள்ளனர் என்று மோகன் சி.லாசரஸ் வாட்ஸ்-அப் வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். #MohanCLazarus
    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகரான மோகன் சி.லாசரஸ் இயேசு விடுவிக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். இவர் ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. அதில் இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியிருந்தார்.

    இது தொடர்பாக அவர் பலர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது கோவை, பொள்ளாச்சி, நாசரேத், பாளை பெருமாள்புரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மோகன் சி.லாசரஸ் பேசிய வீடியோ ஒன்று வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-



    இந்து தெய்வங்களை பற்றியோ, மதத்தை பற்றியோ நான் இழிவுப்படுத்தி பேசவில்லை. சர்ச்சைக்குரிய அந்த காட்சி எப்பொழுது பேசியது என்று அதில் கூறப்படவில்லை. பொது இடங்களில் இதுபோன்று நான் பேசியதில்லை.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இந்தியாவின் நம்பிக்கை, வேதம் என்ற தலைப்பில் கூட்டத்தில் பேசிய காட்சி அது. அதில் சில வார்த்தைகளை மட்டும் வைத்து திரித்து அதை வெளியிட்டுள்ளனர். எனது உடன் பிறந்த சகோதரர்களும் இந்து மதத்தில் உள்ளனர். அவர்களிடம் கூட நான் தவறுதலாக பேசவில்லை. என்னிடம் ஏராளமான இந்து மதத்தினர் பிரார்த்தனைக்காக வருகின்றனர்.

    இவ்வாறு அதில் அவர் பேசியுள்ளார். #MohanCLazarus

    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் கேரளாவுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    நாசரேத்:

    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஆரம்பக் கட்டமாக திருச்செந்தூர் கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சிஅலுவலர் ஆகியோரிடம் ரூ. 1 லட்சம் மதிப்பில் அரிசி, துண்டு ஆகியவற்றை வழங்கினர்.

    இந்நிலையில் நாலுமாவடி இயேசுவிடுவிக்கிறார் ஊழிய நிறுவனம், புது வாழ்வுச் சங்கம், குட் சமாரியன் கிளப் ஆகியவையும் சேர்ந்து இயேசுவிடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் அறிவுரையின்பேரில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெயின்ஸ்சாம் தலைமையில் 22 பேர் அடங்கிய குழுவினர் இடுக்கி மாவட்டத்திற்கு சென்றுஅங்குள்ள செங்கனூர், சப்பாத்து, வண்டிப்பெரியார், பீர்மேடு, வாளடி, திருவல்லா, பத்தனந்திட்டா போன்ற இடங்களில் சுமார் 2 ஆயிரம் மக்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் ரெயின்கோட், துண்டு, சாரம், தார்பாய், பால்பவுடர், சுடிதார், டி-சர்ட்ஸ், மற்றும் 400 குடும்பங்களுக்கு தேவையானஅத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    இது முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனபொதுமேலாளர் செல்வகுமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.

    ×