search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாலுமாவடியில் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து- மோகன்.சி.லாசரஸ் வழங்கினார்
    X

    நாலுமாவடியில் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து- மோகன்.சி.லாசரஸ் வழங்கினார்

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வைத்து 2 ஆயிரம் பேருக்கு மோகன்.சி.லாசரஸ் விருந்து வழங்கினார். #mohanclazarus
    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏழை-எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. 

    இதே போன்று இந்த ஆண்டு  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன். சி. லாசரஸ் தலைமை வகித்தார். நாலுமாவடி சேகர குரு மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்தார். 

    நாலுமாவடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள ஏழை -எளிய மக்கள் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டன.  ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வகுமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.  #mohanclazarus
    Next Story
    ×