search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Urvashi Amritraj MLA"

    • சமத்துவபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
    • மோகன் சி.லாசரஸ், ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதிநாதபுரம் ஊராட்சி சமத்துவபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பில் நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் புதுவாழ்வு சங்கத்தின் சார்பில் ரூ.13.67 லட்சம் பங்களிப்புடன் புதிய தாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கி னார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரமா, ஆழ்வார்திருநகரி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாக்கியலீலா, நாக ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்று பேசினார். விழாவில் நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ், ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நாலு மாவடி இயேசு விடுவிக் கிறார் ஊழிய சமூக சேவை பொறுப்பாளர் எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன் இசக்கி, மாவட்ட அறங்கா வலர் குழு தலைவர் பார்த்தி பன், தி.மு.க. ஆழ்வை நகர செயலாளர் கோபிநாத், மாவட்ட இளைஞர் காங் கிரஸ் தலைவர் இசை சங்கர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய சீலன், வட்டாரத் தலை வர்கள் ஆழ்வை கோதண்ட ராமன், ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, முன்னாள் நகர தலைவர் பாலசுப்பிர மணியன், ஆதிநாதபுரம் பஞ்சாயத்து தலைவி முத்து மாலை, யூனியன் துணைத் தலைவர் ராஜாத்தி, கராத்தே மாஸ்டர் முத்து, தொடக்கப் பள்ளி ஜான்சன் ஊடக பிரிவு முத்துமணி, தி.மு.க. மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செம்பூர் விஜயன், காங்கிரஸ் நிர்வாகிகள் மோகன்ராஜ், சபாபதி, ராஜ், பால கிருஷ்ணன், குமரன், இசக்கி ராஜா, ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சாத்தான்குளம் பேரூராட்சி 9-வது வார்டில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
    • இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூராட்சி 9-வது வார்டில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஸ்டெல்லாபாய் தலைமை தாங்கினார். சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா முன்னிலை வகித்தார். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    விழாவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேணுகோபால், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் குருசாமி, பிச்சிவிளை சுதாகர், பேரூராட்சி துணைத்தலைவர் மாரியம்மாள், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜோசப், அலெக்ஸ், சுந்தர், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சக்திவேல்முருகன், பார்த்தசாரதி, நகர மகிளா காங்கிரஸ் தலைவர் ராணி, மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் வசுமதி, முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ஜாக்குலின், தி.மு.க. நகர செயலாளர் மகாஇளங்கோ, அழகம்மன் கோவில் அறங்காவல் குழுத்தலைவர் சரவணன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ரமேஷ் பாபு (பேய்குளம்), கோதண்டராமன் (ஆழ்வார்), ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பாஸ்கர், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திய சுதந்திர போராட்டத்தில் 32 தியாகிகளை வழங்கிய பெருமை கொண்டது ஆறுமுகநேரி பகுதி.
    • இவரது பெருமையை போற்றும் வகையில் சாத்தான்குளம் பஸ் நிலையத்திற்கு தியாகி கே.டி.கோசல்ராம் என்று பெயர் சூட்டப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜா மணி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய சுதந்திர போராட்டத்தில் 32 தியாகிகளை வழங்கிய பெருமை கொண்டது ஆறுமுகநேரி பகுதி. இவர்களில் முக்கியமான தியாகி கே.டி. கோசல்ராம் பின்னாளில் சாத்தான்குளம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 2 முறையும், பின்னர் திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் 9 வருடங்களாக எம்.பி. ஆகவும் இருந்து வந்துள்ளார். அவரது வாழ்நாள் சாதனைகளில் மணிமுத்தாறு அணை திட்டம் மணி மகுடமாக விளங்குகிறது.

    இவரது பெருமையை போற்றும் வகையில் சாத்தான்குளம் பஸ் நிலையத்திற்கு தியாகி கே.டி.கோசல்ராம் என்று பெயர் சூட்டப்பட்டது. பெயிண்டால் எழுதப்பட்ட அந்தப் பெயர் தற்போது அழிந்த நிலையில் உள்ளது. இதனை உலோக எழுத்துக்களால் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×