search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Udhayanithi"

    • 2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?
    • 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    இதுகுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?

    தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல்... என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்?

    2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?

    இந்தியாவை 2020-ல் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்?

    கருப்பு பணத்தை மீட்பேன் என்று கடுகு டப்பாவிலும், சுருக்குப் பையிலும் எங்கள் மக்கள் சேமித்து வைத்திருந்த 500, 1000-த்தை பிடுங்கினீர்களே, கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்?

    ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த உங்களை CAG அறிக்கை அம்பலப்படுத்தியும் அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?

    அடுக்கடுக்காய் வடக்கே 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த நீங்கள், 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?

    அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?

    கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அடுக்கடுக்காக தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும்போது, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்டப் பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்?

    வாழும் தமிழின் வளர்ச்சிக்கு பெரிதாக நிதி இல்லை, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.1074 கோடி எதற்கு?

    நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?

    #பதில்_சொல்லுங்கள்_மோடி

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உதயநிதி ஸ்டாலினுக்கு தாழையூத்து அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • வரவேற்பு நிகழ்ச்சியையொட்டி நான்கு வழிச்சாலை இருபுறமும் மின்னொளியில் ஜொலித்தது.

    நெல்லை:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    இதற்காக நேற்றிரவு விருதுநகரில் இருந்து காரில் நெல்லை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தாழையூத்து அருகே பண்டாரகுளம் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் வந்திருந்தனர். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது செண்டை மேளம் முழங்க சிலம்ப குழுவினரின் சாகசங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் பண்டாரகுளம் பகுதியில் நான்கு வழிச்சாலை இருபுறமும் மின்னொளியில் ஜொலித்தது.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான விஜிலா சத்யானந்த், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், பாளை யூனியன் சேர்மனும், பாளை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கே.எஸ்.தங்கபாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, தச்சை பகுதி செயலாளரும், முன்னாள் மண்டல சேர்மனுமான தச்சை சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீர பாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, கீழநத்தம் பஞ்சாயத்து தலைவரும், கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளருமான அனுராதா ரவி முருகன், சமூக ஆர்வலரும், ராதாபுரம் ஒன்றிய இளைஞரணி விஜயாபதி ஏ.ஆர்.ரகுமான், மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா, நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், மாவட்ட தொழில்நுட்ப அணி பிரபா அருள்மணி, முன்னாள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான நவநீதன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×