search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Memorial Program"

    • மதுரையில் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
    • கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மதுரை

    மதுரையில் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி தொ.மு.ச. சார்பில் அனுசரிக்கப்பட்டது. மண்டல செயலாளர் ராஜேஸ்கண்ணன், நிர்வாகி சுபாஷ் ஆகியோர் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் முத்தையா, ரிச்சர்ட், குமார், முத்துப்பாண்டி, கென்னடி, சண்முகசுந்தரம், காமாட்சி அப்பன், எபினேசர்பால், பரமேஸ்வரன், சரவணன், திருவேட்டை ஜாகீர்உசேன், செபாஸ்டியன், ராஜன், ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் பஸ் நிலையம் முன்பு அவரது உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு நாள் நிகழ்ச்சி.

    பல்லடம் :

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், 217வது நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில்,பல்லடம் பஸ் நிலையம் முன்பு அவரது உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்டச் செயலாளரும்,மாவட்ட கவுன்சிலருமான கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட அவை தலைவர் ராமசாமி,ஒன்றிய செயலாளர்கள் தங்கராஜ், பூபதி, நகர தலைவர் ஆறுக்குட்டி,நகர செயலாளர் வெங்கடேஷ்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் வீரக்குமார், ஒன்றிய துணைத்தலைவர் முத்துக்குமாரசாமி,மற்றும் மாணவரணி, இளைஞரணி, நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல பல்லடம் கடைவீதியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தீரன் சின்னமலை நினைவஞ்சலி நிகழ்ச்சியில், மாவட்ட துணைத்தலைவர் சிட்டிசன் ஈஸ்வரன், நகரத் தலைவர் வடிவேலன், மூத்த நிர்வாகி ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி, மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதன்படி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நகராட்சித் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமையில், நகராட்சி ஆணையாளர் விநாயகம், சுகாதார ஆய்வாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், மற்றும் அலுவலர்கள், திமுக நகர பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல, பல்லடம் சுவாமி விவேகானந்தா, ப்ளூ பேர்ட், கண்ணம்மாள், யுனிவர்சல், பாரதி உள்ளிட்ட தனியார் பள்ளிகளிலும், அரசு அரசுப் பள்ளிகளிலும், அப்துல் கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    ×