search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mandeep Singh"

    • ரோகித் சர்மா தினேஷ் கார்த்திக் 14 முறை டக் அவுட் ஆகியுள்ளனர்.
    • பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், பார்தீவ் படேல், ரகானே, அம்பதி ராயுடு ஆகியோர் 13 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர்.

    ஐபிஎல் 2023:

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் சரிவை சந்தித்தாலும் கடைசி அதிரடியாக விளையாடி 204 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 123 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

     இந்த போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் கொல்கத்தா வீரர் மந்தீப் சிங் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களாக இருந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக்கை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை மந்தீப் சிங் பிடித்துள்ளார்.

    15 முறை மந்தீப் சிங் டக் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா தினேஷ் கார்த்திக் 14 முறையும் பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், பார்தீவ் படேல், ரகானே, அம்பதி ராயுடு ஆகியோர் 13 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர்.

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடருக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக பேட்ஸ்மேன் மந்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். குர்தீரத் சிங் மான் துணைக் கேப்டன். #RanjiTrophy
    இந்தியாவின் மிகப்பெரிய முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி வியாழக்கிமை (நவம்பர்-1) தொடங்குகிறது. பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் ஆந்திராவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

    இதற்கான பஞ்சாப் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மந்தீப் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குர்கீரத் சிங் மான் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரரான ஷுப்மான் கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஷுப்மான் கில், 2.  ஜீவன்ஜோத சிங், 3. அன்மோல்ப்ரீத் சிங், 4. மந்தீப் சிங், 5. சன்வீர் சிங், 6. குர்கீரத் சிங் மான், 7 அபிஷேக் குப்தா, 8. அபிஷேக் ஷர்மா, 9. மயாங்க் மார்கண்டே, 10. அர்பித் பன்னு, 11. வினய் சவுத்ரி, 12. சித்தார்த் கவுல், 13. ஷுபெக் கில், 14. பால்டெஜ் சிங், 15. பரிந்தர் ஸ்ரன், 16. ஷரத் லூம்பா.
    பெங்களூருவில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஹாக்கி தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. #HockeyIndia #INDvNZ
    இந்தியா - நியூசிலாந்து ஆடவர் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் 2-வது ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா 3-1 என வெற்றி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    முதல் காலிறுதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி நேரத்தில் இந்தியா இரண்டு கோல்களும், நியூசிலாந்து ஒரு கோலும் அடித்தது. இதனால் பாதி நேர ஆட்டத்தில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றது.



    18-வது நிமிடத்தில் ருபிந்தர் பால் சிங்கும், 27-வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங்கும் கோல் அடித்தனர். 24-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் ஜென்னெஸ் கோல் அடித்தார். 56-வது நிமிடத்தில் மந்தீப் சிங் ஒரு கோல் அடிக்க இந்தியா 3-1 என வெற்றி பெற்றது.
    ×