search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mainpuri"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெயின்புரி தொகுதியில் இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் அமைச்சர் ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.
    • 3-வது கட்டமாக மெயின்புரி தொகுதியில் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது.

    உத்தர பிரதேசத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி 8 தொகுதிகளுக்கு நடக்கிறது.

    இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் மனைவியான டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அகிலேஷ் யாதவ் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    மெயின்புரி தொகுதியில் இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் அமைச்சர் ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.

    மூன்றாவது கட்டமாக மெயின்புரி தொகுதியில் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முலாயம் சிங்கின் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானது.
    • பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது.

    புதுடெல்லி:

    சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உத்தர பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவரது மறைவால் காலியான அந்த தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தொகுதியில் 54.37 சதவீத வாக்குகள் பதிவானது. அங்கு சமாஜ்வாடி சார்பில் முலாயமின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல, சமாஜ்வாடி மூத்த தலைவர்களில் ஒருவரான அசம்கானின் தகுதி நீக்கத்தால் காலியான ராம்பூர் சதர் சட்டசபை தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் மிகவும் குறைவாக வெறும் 34 சதவீத வாக்குகளே பதிவானது. இதில் மக்களை ஜனநாயக கடமை ஆற்ற விடாமல் தடுத்ததாக பா.ஜ.க.வும், சமாஜ்வாடியும் ஒன்றையொன்று குற்றம்சாட்டின.

    மேலும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது.

    ஒடிசாவின் பதம்பூரில் 76 சதவீதம், ராஜஸ்தானின் சர்தார்ஷாகரில் 70 சதவீதம், சத்தீஸ்கரின் பனுபிரதாப்பரில் 64.86 சதவீதமும், உத்தர பிரதேசத்தின் கதாலியில் 56.46 சதவீதமும், பீகாரின் குரானியில் 57.9 சதவீதமும் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #UPBusAccident #PMCondole
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில்,  உ.பி.யின் மெயின்புரி பகுதியில் நடைபெற்ற  சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். #UPBusAccident #PMCondole
    ×