search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madrasa"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதரசா சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதாக என கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
    • மதரசாவில் படிக்கும் 17 லட்சம் மாணவர்கள் மற்றும் 10,000 ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது

    2004-ம் ஆண்டு முதல் உத்தர பிரதேசத்தில் மதரசா எனப்படும் இஸ்லாமிய மதக் கல்வியை கற்றுத் தரும் பள்ளிகளுக்கு என, உ.பி., மதரசா கல்வி வாரிய சட்டம் அமலில் உள்ளது.

    இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதாக இருப்பதாகவும், மதரசா வாரியத்தை மத்திய, மாநில சிறுபான்மையின நலத்துறை நிர்வகிப்பதும் தவறு என்றும் கூறி, அன்சுமான் சிங் ரத்தோர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விவேக் சவுத்ரி மற்றும் சுபாஷ் வித்யார்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, உத்தர பிரதேச மதரசா கல்வி வாரிய சட்டம் 2004, அரசியலமைப்புக்கு எதிரானது. அத்துடன் இது மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுகிற வகையில் உள்ளது என்று கூறி அந்த சட்டத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் மார்ச் 22 அன்று ரத்து செய்து உத்தரவிட்டது.

    மேலும், தற்போது மதரசாக்களில் கல்வி பயிலும் மாணவர்களை, வழக்கமான கல்வி நிறுவனங்களில் சேர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி மதரசாவில் படிக்கும் 17 லட்சம் மாணவர்கள் மற்றும் 10,000 ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, மதரசா கல்விச் சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

    அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது மத்திய அரசு, உத்தரபிரதேச அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • கீழக்கரையில் புதிய மதரஸா திறப்பு விழா நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிக்கு சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் நைனார் முஹம்மது பாக்கவி ஹழ்ரத் கிப்லா தலைமையில் தாங்கினார்.

    கீழக்கரை

    கீழக்கரை பி.எஸ்.எம். பெண்கள் விளையாட்டு மைதானத்தில் ரஹ்மத் ஆயிஷா பட்டத்து சுல்த்தான் அப்துல் காதர் மரைக்காயர் அறக்கட்டளை மற்றும் ஆயிஷா ஹமீதா ஹிப்ஸ் மதரஸா, அதாயி பெண்கள் ஹிப்ஸ் மதரசா சார்பில் கிராஅத் மாநாடு - 2022 மற்றும் பெண்களுக்கான புதிய மதரஸா திறப்பு விழா நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் நைனார் முஹம்மது பாக்கவி ஹழ்ரத் கிப்லா தலைமையில் தாங்கினார். பி.எஸ்.எம். நிறுவனத்தின் செயல் இயக்குனர்கள் சலீம் அன்சாரி, முஹம்மது அலி ஆகியோர் பெண்களுக்கான புதிய மதரஸாவை திறந்து வைத்தனர்.

    இதை தொடர்ந்து கிராஅத் மாநாடு - 2022 தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வந்த ஏராளமான பேஷ் இமாம்கள் (மதகுரு) மாநாட்டில் கலந்து கொண்டு பேசினர்.

    பெங்களூர், மைசூர் பகுதியிலிருந்து குர்ஆனை முறையாக ஓதக்கூடிய காரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் ஓதும் திறனை வெளிப்படுத்தினர்.

    சிறப்பு அழைப்பாளராக சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் நைனார் முஹம்மது பாக்கவி ஹழ்ரத் கிப்லா கலந்து கொண்டு பேசினார். மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர், கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, உதவி தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான், ஜஹாங்கீர் அருஸி, கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ச ஹூஸைன், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கீழக்கரை பி.எஸ்.எம். குழுமத்தின் சேர்மன் ஹபிபுல்லா கான், பி.எஸ்.எம். ஹூண்டாய் நிறுவன நிர்வாக இயக்குனர் மஹ்மூத் ஹூசைன் ஆகியோர் ஆலோசனையின் பேரில் செய்திருந்தனர்.

    ×