search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "M Sukumar"

    • புஷ்பா படத்தின் 3-ம் பாகத்தையும் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
    • கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2-ம் பாகமான ‘புஷ்பா: தி ரூல்’ படத்தை சுகுமார் இயக்கி வருகிறார்.

    புஷ்பா படத்தின் 3-ம் பாகத்தையும் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா: தி ரைஸ்' படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2-ம் பாகமான 'புஷ்பா: தி ரூல்' படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பெர்லின் திரைப்பட விழாவில் 'புஷ்பா தி ரைஸ்' படம் திரையிடப்பட உள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் படக்குழுவுடன் பெர்லினுக்கு சென்றுள்ளனர். அங்கு பேசிய அல்லு அர்ஜுன் "நீங்கள் நிச்சயமாக 'புஷ்பா' படத்தின் 3-வது பாகத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்

    அதன் அடுத்த பாகங்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். அதற்கான அற்புதமான யோசனைகள் எங்களிடம் உள்ளன. புஷ்பா 2-வது பாகம் முதல் பாகத்தை விட வித்தியாசமாகவும், புதுவித அனுபவமாகவும் இருக்கும். காரணம் உள்ளூரில் இருந்த கதைக்களம், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் விரிவடைந்துள்ளது.

    புஷ்பா முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரத்தில் நடித்த ஃபஹத் ஃபாசில், இந்த பாகத்தில் புஷ்பாவுக்கு பெரும் சவாலாக இருப்பார். மேலும் இருவருக்குமான மோதல் மிகப் பெரிய அளவில் இருக்கும்" என்று அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

    பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் வர்மா படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்த நிலையில், அதற்கான காரணம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Varmaa #DhruvVikram
    விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளிவந்த தெலுங்கு படம், ‘அர்ஜூன் ரெட்டி’. இந்த படம் தென்னிந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை கேரளாவை சேர்ந்த ஈ4 எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் முகேஷ் ஆர்.மேத்தா பெற்று இருந்தார்.

    முகேஷும், நடிகர் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள். அதனால், விக்ரமின் மகனான துருவை வைத்து இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டார். தனக்கு சேது படத்தின் மூலம் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த பாலா படத்தில் தன் மகனை அறிமுகம் செய்ய வேண்டும் என்பது விக்ரமின் எண்ணம்.



    இதைத் தொடர்ந்து துருவை அறிமுகம் செய்ய பாலாவும் ஒப்புக் கொண்டார். அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா தொடங்கியது. சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரெய்லரும் வெளியானது. அதற்கு வரவேற்பும் கிடைத்தது. படத்தை காதலர் தினமான வரும் 14-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பு சார்பில் படம் கைவிடப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

    சேது படம் மூலம் விக்ரமுக்கு திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தவர் இயக்குனர் பாலா. பிதாமகன் படத்தின் மூலம் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று தந்தவர். நான் கடவுள் படத்தின் மூலம், சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றவர்.



    இந்த நிலையில் தயாரிப்பு தரப்பு வேறு இயக்குனரை வைத்து வர்மா படத்தை எடுக்க இருப்பதாக அறிவித்து இருப்பது, தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் சுமார் ரூ.15 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் வீணாகப்போகிறது. தயாரிப்பு தரப்புக்கு ரூ.15 கோடிக்கு மேல் நஷ்டம் ஆகலாம் என்கிறார்கள்.

    இதன் பின்னணி பற்றி படக்குழுவை சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் கூறியதாவது, ‘முதலில் ரீமேக் படத்தை எடுக்க பாலா விரும்பவே இல்லை. அவரை கட்டாயப்படுத்தி தான் சம்மதிக்க வைத்தார்கள். வர்மா படத்தின் கதையில் பாலா ஏகப்பட்ட மாற்றங்கள் செய்தார். அசல் தெலுங்கு பதிப்பில் சில காட்சிகளில் மட்டுமே வரும் வீட்டு வேலை செய்யும் பெண்மணியின் வேடத்தை பெரிதாக்கி படம் முழுக்க வருவது போல மாற்றி அமைத்தார்.

    அந்த கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். படம் தொடங்கியபோதே விக்ரமுக்கும், பாலாவுக்கும் செட் ஆகவில்லை. பாலா இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று சொன்னார். ஆனால் விக்ரம் அதை நிராகரித்து அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் இசையமைப்பாளர் ரதனை ஒப்பந்தம் செய்ய சொன்னதாகவும் தெரிகிறது.



    முழு படத்தையும் பார்த்த விக்ரமுக்கும், அவரது மகன் துருவ்வுக்கும் திருப்தி இல்லை. நெருக்கமான காட்சிகள் அதிகமாக படத்தில் இருந்ததும் இதற்கு காரணம். இதனால் கோபமான துருவ் சினிமாவே வேண்டாம் என்று கூறி அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். இந்த படத்தை ரிலீஸ் செய்தால் துருவ்வுக்கு மோசமான தொடக்கமாக அமையும் என்பதால் தான் விக்ரம் பாலாவின் நட்பை மீறி இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

    படத்தை பார்த்த தயாரிப்பாளர் கதையில் சில மாற்றங்கள் செய்ய கூறி இருக்கிறார். ஆனால் ஒரு காட்சியை கூட மாற்ற மாட்டேன் என்று பாலா கூறிவிட்டார். தமிழ் சினிமா மட்டும் அல்ல இந்திய சினிமா வரலாற்றிலேயே முழுமையாக எடுக்கப்பட்ட படத்தை கைவிடுவது முதல் நிகழ்வு. ஆனால் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக நஷ்டத்தை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளரை பாராட்டியே ஆகவேண்டும்’ என்றனர். #Varmaa #DhruvVikram

    பாலா இயக்கத்தில் துருவ் - மேகா நடிப்பில் உருவாகி இருக்கும் `வர்மா' படத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் படம் ரிலீசாகாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha
    தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

    பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இ4 என்டர்டெயின்மெண்ட் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற தலைப்பில் தயாரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. மேலும் படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம். மேலும் வர்மா படத்தை துருவ்வை வைத்தே மீண்டும் முதலில் இருந்து எடுக்க முடிவு செய்திருக்கிறோம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும். 

    படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். விரைவில் படப்பிடிப்பை தொடங்கி 2019 ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். 

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha

    பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்தித்தில் நடித்துள்ள சான்ட்ரா ஏமி, பாலாவை பார்த்து முதலில் பயந்ததாகவும், பின்னர் மிகவும் வசதியாக உணர்ந்ததாகவும் கூறினார். #Varma #SandraAmy
    காற்றின் மொழி படத்தில் பண்பலைத் தொகுப்பாளினியாக நடித்து கவனம் பெற்றவர் சான்ட்ரா ஏமி. அடுத்து அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வர்மா படத்தை எதிர்பார்த்துள்ளார்.

    அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகும் வர்மா படத்தை பாலா இயக்குகிறார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் தேவி என்ற கதாபாத்திரத்தில் சான்ட்ரா நடித்துள்ளார். அவர் பாலா இயக்கத்தில் நடித்த அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். 



    “காற்றின் மொழி படத்திற்கு முன்பே வர்மா படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். ஆர்வமுள்ள எந்த நடிகருக்கும் பாலா இயக்கத்தில் நடிப்பது கனவாக இருக்கும். கதாபாத்திர தேர்வு நடைபெற்ற போது கலந்து கொண்டு தேர்வு ஆனேன். எந்த நடிகருக்கும் முதல் நாள் படப்பிடிப்பில் நடிக்கும்போது பதட்டமாக இருக்கும். பாலா மிரட்டுவார் என்று கூறி இருந்தார்கள். வசனம் சரியாக பேசவில்லை என்றாலோ அல்லது சரியாக நடிக்கவில்லை என்றாலோ மட்டும் தான் கோபப்படுவார் என்பதை நான் நடிக்கத் தொடங்கிய பின் புரிந்துகொண்டேன். மிகவும் வசதியாக உணர்ந்தேன்.

    ஒவ்வொரு காட்சியையும் ரசித்து நடித்தேன். அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். தேவி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். துருவ் விக்ரமுடன் இணைந்து சில காட்சிகளில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார். #Varma #DhruvVIkram #Bala #SandraAmy

    ‘வர்மா’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் துருவ் விக்ரம், திரிஷாவுடன் நடிக்க ஆசைப்படுவதாகவும், நான் தூங்கும் போது அவர் கன்னத்தை கிள்ளிச் சென்றதாகவும் கூறியுள்ளார். #DhruvVikram #Trisha
    தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘வர்மா’ படத்தில் மேகா என்ற மாடல், துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தை பிப்ரவரியில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 



    இந்நிலையில், ‘எந்த நடிகையோடு நடிக்க ஆசை?’ என துருவ் விக்ரமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், “சிறுவயதில் இருந்தே திரிஷாவை ரொம்பப் பிடிக்கும். ஆனால், இதுவரை அவரைச் சந்தித்தது கூட இல்லை. ஒருமுறை பிரிவியூ தியேட்டரில் இருந்தபோது நான் தூங்கிவிட்டேன். அப்போது அவர் வந்து என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு சென்றுவிட்டார்” எனத் தெரிவித்தார். #DhruvVikram #Trisha #Varma

    பாலா இயக்கத்தில் துருவ் - மேகா நடிப்பில் உருவாகி இருக்கும் `வர்மா' படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Varma #DhruvVikram #Megha
    தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா சவுத்ரி என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். 

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் கைப்பற்றியிருக்கிறார். படத்தை வருகிற பிப்ரவரியில், காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே `வானோடும் மண்ணோடும்' என்ற பாடல் வரிகள் அடங்கிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.


    இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரதன் இசையமைக்க சுகுமார் இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். #Varma #DhruvVikram #Megha

    பாலா இயக்கத்தில் துருவ் - மேகா நடிப்பில் உருவாகி இருக்கும் வர்மா படத்தை டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha
    தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். 

    ஏற்கெனவே ஒரு பெங்காலிப் படத்தில் நடித்திருக்கும் மேகா, ‘வர்மா’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கதக் நடனத்தில் தேர்ச்சி பெற்ற இவருடைய கேரக்டர் பெயரும் மேகா என்று தகவல் கிடைத்துள்ளது. முதல் படத்திலேயே சொந்தப் பெயரில் நடிப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மேகா. 

    இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார். சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்கா, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, கடந்த செப்டம்பர் 17-ம் தேதியுடன் நிறைவுற்றது.



    இதன் டீஸர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தை வருகிற டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha

    பாலா இயக்கத்தில் `அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக உருவாகும் `வர்மா' படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக நடிக்க பெங்கால் நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #Varma #DhruvVikram
    தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமாகிறார். 

    பாலா இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், துருவ் ஜோடியாக நடிக்க வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். முன்னதாக ஷ்ரியா சர்மா, சுப்புலெட்சுமி, ஜான்வி கபூர் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில் துருவ் ஜோடியாகி இருக்கிறார் மேகா.



    `வர்மா' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு `குக்கு', `ஜோக்கர்' பட இயக்குநர் ராஜு முருகன் வசனங்களை எழுதுகிறார். இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். #Varma #DhruvVikram

    ×