என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lorry fire accident"
- தீ விபத்தில் லாரியில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதமானது.
- தீ விபத்தால் நள்ளிரவில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பவானி:
தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் சதீஸ். இவருக்கு சொந்தமான லாரியை சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஓட்டி வருகிறார்.
இவர் நாக்பூரில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு வந்தார். நேற்று நள்ளிரவு 12.50 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு-சத்தி மெயின் ரோட்டில் ஊத்துக்காடு என்ற பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென லாரி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் வெங்கடேஷ் லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி தப்பினார். அந்த நேரத்தில் தீ மளமளவென பிடித்து லாரி முழுவதும் எரிய தொடங்கியது.
பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கபப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் புகழேந்தி தலைமையில் பவானி மற்றும் ஈரோட்டில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் லாரியில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தபோது லாரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இந்த தீ விபத்தால் நள்ளிரவில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வேப்பூர் போலீஸ் நிலையம் அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது லாரி திடீரென தீப்பிடித்தது.
- லாரியின் என்ஜின் பகுதி எரிந்தது. உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
வேப்பூர்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, தேரிழந்தூர் பகுதி, சிவன்கோவில் கீழவீதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). இவர் லாரியில் உளுந்தூர்பேட்டையில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் போலீஸ் நிலையம் அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது லாரி திடீரென தீப்பிடித்தது.
இதில் லாரியின் என்ஜின் பகுதி எரிந்தது. உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரியின் டிரைவர் சரத்குமாருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
இது குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கம்பம்:
கேரளா மாநிலத்தில் உள்ள கால்நடைகளின் தீவனத்திற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வைக்கோல் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் கம்பத்தை சார்ந்த மணிவண்ணன் கேரளாவிற்கு வைக்கோல் களை லாரிகளில் ஏற்றி கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.
அதன்படி மதுரை அருகே உள்ள செக்கானூரணி சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வைக்கோல் கட்டுகளாக கட்டப்பட்டு சுமார் 180 -க்கும் மேற்பட்ட கட்டுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரளா மாநிலம் கோட்டயம் நோக்கி சென்றது. லாரியை கம்பத்தை சேர்ந்த டிரைவர் சுரேந்திரன் ஓட்டினார்.
இந்த லாரியை டிரைவர் கம்பம் பகுதியில் உள்ள தியேட்டர் பகுதியில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்று விட்டார். சிறிது நேரத்தில் லாரியில் இருந்து புகை வந்துள்ளது.லாரியிலிருந்து புகை கிளம்புவதை கண்டு அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ பரவுவதற்குள் வைக்கோல் மீது தண்ணீர் பாய்ச்சி அடித்தனர். இதனால் தீ பரவாமல் அணைக்கப்பட்டது. விரைந்து செயல்பட்டதால் லாரி சேதமாகாமல் தப்பியது. இது குறித்து கம்பம் வடக்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்