search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்பம் பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் தீ
    X

    கம்பம் பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் தீ

    கம்பம் பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    கேரளா மாநிலத்தில் உள்ள கால்நடைகளின் தீவனத்திற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வைக்கோல் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டம் கம்பத்தை சார்ந்த மணிவண்ணன் கேரளாவிற்கு வைக்கோல் களை லாரிகளில் ஏற்றி கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.

    அதன்படி மதுரை அருகே உள்ள செக்கானூரணி சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வைக்கோல் கட்டுகளாக கட்டப்பட்டு சுமார் 180 -க்கும் மேற்பட்ட கட்டுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரளா மாநிலம் கோட்டயம் நோக்கி சென்றது. லாரியை கம்பத்தை சேர்ந்த டிரைவர் சுரேந்திரன் ஓட்டினார்.

    இந்த லாரியை டிரைவர் கம்பம் பகுதியில் உள்ள தியேட்டர் பகுதியில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்று விட்டார். சிறிது நேரத்தில் லாரியில் இருந்து புகை வந்துள்ளது.லாரியிலிருந்து புகை கிளம்புவதை கண்டு அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ பரவுவதற்குள் வைக்கோல் மீது தண்ணீர் பாய்ச்சி அடித்தனர். இதனால் தீ பரவாமல் அணைக்கப்பட்டது. விரைந்து செயல்பட்டதால் லாரி சேதமாகாமல் தப்பியது. இது குறித்து கம்பம் வடக்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×