என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பூர் போலீஸ் நிலையம் அருகே ஓடும் லாரியில் திடீர் தீ- டிரைவர் உயிர் தப்பினார்
    X

    வேப்பூர் போலீஸ் நிலையம் அருகே ஓடும் லாரியில் திடீர் தீ- டிரைவர் உயிர் தப்பினார்

    • வேப்பூர் போலீஸ் நிலையம் அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது லாரி திடீரென தீப்பிடித்தது.
    • லாரியின் என்ஜின் பகுதி எரிந்தது. உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

    வேப்பூர்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, தேரிழந்தூர் பகுதி, சிவன்கோவில் கீழவீதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). இவர் லாரியில் உளுந்தூர்பேட்டையில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    கடலூர் மாவட்டம், வேப்பூர் போலீஸ் நிலையம் அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது லாரி திடீரென தீப்பிடித்தது.

    இதில் லாரியின் என்ஜின் பகுதி எரிந்தது. உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரியின் டிரைவர் சரத்குமாருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

    இது குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×