என் மலர்
நீங்கள் தேடியது "lorry bus crash"
ஆம்பூர்:
சென்னையில் இருந்து ஓசூருக்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் ஆறுமுகம் (வயது 40). பஸ்சை ஓட்டி வந்தார். கண்டக்டர் கோபால் (45). உள்பட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் என்ற இடத்தில் பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது மோதியது.
இதில் டிரைவர் ஆறுமுகம், கண்டக்டர் கோபால், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ், போச்சம்பள்ளியை சேர்ந்த விக்ரமன் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு வாணிம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.
ஆம்பூர்:
சென்னையில் இருந்து நேற்றிரவு அரசு பஸ் 40 பயணிகளுடன் தருமபுரிக்கு புறப்பட்டது. பஸ்சை வெள்ளக்குட்டை பகுயை சேர்ந்த கெங்காதரன் (வயது 35) டிரைவர் ஓட்டிச் சென்றார்.ஆம்பூர் அடுத்த அய்யனூர் அருகே இன்று அதிகாலை பஸ் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது.
விபத்தில் பஸ் டிரைவர் கெங்காதரன். கண்டக்டர் சந்திர சேகர். பயணிகள் ராமசாமி (55). மாதையன் (44). கோவிந்தராஜன் ( 40). காவேரி (65). சிவகாமி (37). தங்கராஜ் (50). வெண்ணிலா (20). காந்தி (30). புஷ்பா (50). கவிதா (45). பிடல்கோஸ் (32). சந்திரா (50). உள்பட 26 பேர் கடுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைரோடு:
மதுரையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. கொடைரோடு சுங்கச்சாவடி முன்பாக வந்தபோது இடதுபுற ஓரத்தில் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை கவனிக்காமல் அரசு பஸ் நின்று கொண்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூக்கத்தில் இருந்தனர். திடீரென பஸ் விபத்தில் சிக்கியதை உணர்ந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் லாரியின் பின் பகுதி முழுவதும் சுக்கு நூறாக உடைந்து சேதமானது. மேலும் அரசு பஸ்சின் முன் பகுதியும் உடைந்தது.
பஸ் டிரைவரான மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (வயது 39), கண்டக்டர் சுப்புராஜ் (49) ஆகிய இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது. பஸ்சில் பயணம் செய்த கோவையைச் சேர்ந்த முத்துப்பாண்டி (33), மாசினி (47), அவரது மனைவி கவிதா (42), பல்லடத்தைச் சேர்ந்த செந்தில்பிரபு (30) ஆகியோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சவுந்தர்யா (19), இசக்கி துரை (45), கோபி (33), சிவஞானய்யா, ஜெயமாலா மேரி, பாலு, திருப்பதி ராஜா, காஜாமைதீன் ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து அம்மைய நாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை 4 வழிச்சாலையில் மறித்து சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு பயந்தே லாரிகள் சுங்கச்சாவடி அருகே சாலை ஓரம் நிறுத்தப்பட்டு அதிகாரிகள் சென்ற பிறகு மீண்டும் அவை இயக்கப்படுகிறது.
அதுபோல்தான் சாலை ஓரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது அரசு பஸ் மோதியுள்ளது. இதுவே விபத்துக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆம்பூர்:
சென்னையில் இருந்து நேற்று இரவு பயணிகளுடன் அரசு பஸ் திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டு வந்தது.
ஆம்பூர் அருகே மின்னூர் என்ற இடத்தில் சென்னை பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த மினி லாரி மீது அரசு பஸ் மோதி நின்றது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த வாணியம்பாடியை சேர்ந்த அமுதா (வயது 42). கிருஷ்ணவேணி (67). இர்பால் (28). ஊத்தங்கரையை சேர்ந்த திருமால் (40). திருப்பத்தூரை சேர்ந்த சாமுண்டிஸ்வரி (48). சென்னையை சேர்ந்த பாஷா (22). காட்பாடியை சேர்ந்த பாலாகிருஷ்ணன் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஈடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






