search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர் அருகே லாரி-பஸ் மோதி 7 பேர் படுகாயம்
    X

    ஆம்பூர் அருகே லாரி-பஸ் மோதி 7 பேர் படுகாயம்

    ஆம்பூர் அருகே மினி லாரி மீது அரசு பஸ் மோதியதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

    ஆம்பூர்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு பயணிகளுடன் அரசு பஸ் திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டு வந்தது.

    ஆம்பூர் அருகே மின்னூர் என்ற இடத்தில் சென்னை பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த மினி லாரி மீது அரசு பஸ் மோதி நின்றது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த வாணியம்பாடியை சேர்ந்த அமுதா (வயது 42). கிருஷ்ணவேணி (67). இர்பால் (28). ஊத்தங்கரையை சேர்ந்த திருமால் (40). திருப்பத்தூரை சேர்ந்த சாமுண்டிஸ்வரி (48). சென்னையை சேர்ந்த பாஷா (22). காட்பாடியை சேர்ந்த பாலாகிருஷ்ணன் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

    ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஈடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×