search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumaraguru"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.
    • முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.

    ரிஷிவந்தியம்:

    கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாணாபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    ரிஷிவந்தியம் வந்த எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விஜயகாந்த் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு ரிஷிவந்தியம் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.

    நான் எந்த தொகுதிக்கு சென்றாலும் தைரியமாக பேசுவேன். ஆனால் கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்த இந்த பூமியை நிச்சயமாக என்னால் மறக்க முடியவில்லை. எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் செய்த திட்டங்கள் குறித்து பேசிய போது திடீரென அவர் தேம்பி, தேம்பி அழ தொடங்கினார். இதைப்பார்த்த அங்கிருந்த தொண்டர்களின் கண்களிலும் கண்ணீர் வரத் தொடங்கியது. பின்னர் அவர் தனது அழுகையை அடக்கிக் கொண்டு மீண்டும் தனது பேச்சை தொடங்கினார். முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.

    • நீதிபதி முறையாக அனுமதி பெற்று மீண்டும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில் குமரகுரு மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டார்.
    • கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அமைதியான சூழல் காணப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசிய விவகாரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வருத்தம் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதை கண்டித்து மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.

    இதனால் குமரகுரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து முன்ஜாமீன் பெற சென்னை ஐகோர்ட்டில் குமரகுரு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி முறையாக அனுமதி பெற்று மீண்டும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில் குமரகுரு மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அ.தி.மு.க. மதுரை மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.

    இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர் குமரகுரு, அமைச்சர் உதயநிதி குறித்து நான் அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

    அந்த பேச்சு புண்படும் படி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அப்போதே சமூகவலை தளங்கள் வழியாக தெரிவித்து இருந்தேன். இப்போதும் இந்த கூட்டத்தின் வாயிலாக அவ்வாறு புண்படும் படி பேசி இருந்தால் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

    அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அமைதியான சூழல் காணப்பட்டது.

    ×