search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala suicide"

    • ஓட்டல் நடத்தி வந்த மணி குட்டனுக்கு கடன் தொல்லை இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
    • இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றிங்கல், சாத்தான்பாறையை சேர்ந்தவர் மணி குட்டன். அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார்.

    மணிகுட்டனின் மனைவி சிந்து, இவர்களுக்கு அமேஷ், ஆதிஷ் என்று 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் மணிகுட்டனின் அத்தை தேவகி என்பவரும் வசித்து வந்தார்.

    இவர்கள் 5 பேரும் சாத்தன்பாறையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இன்று காலையில் இவர்களின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்காததால் அவர்கள் இது பற்றி ஆற்றிங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மணிகுட்டன் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். மற்றவர்கள் அனைவரும் விஷம் குடித்து இறந்து கிடந்தனர்.

    அதிர்ச்சி அடைந்த போலீசார் 5 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். இதில் மணிகுட்டன் தனது மனைவி, அத்தை மற்றும் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.

    மேலும் ஓட்டல் நடத்தி வந்த மணி குட்டனுக்கு கடன் தொல்லை இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கேரளாவில் குடும்ப தகராறு காரணமாக கணவர் கண் முன்பு குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சாத்தனூர் பாரக்கல் அருகே உள்ளது காடியாதி. இந்த பகுதியை சேர்ந்த மணி- அம்புலி மகள் மாயா (வயது 19). இவரும் அதே பகுதியை சேர்ந்த திலீப் (24) என்பவரும் திருமணம் ஆகாமலேயே கணவன்- மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு பிறந்து 10 மாதங்களே ஆன மைதிலி என்ற பெண் குழந்தை இருந்தார்.

    திலீப் நடன பயிற்சியாளராக உள்ளார். நடனம் பயிற்சி அளிக்க செல்லக்கூடாது என்று மனைவி தடைபோட்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த திலீப் அங்குள்ள பயிற்சி மையத்தில் பெண்களுக்கு நடன பயிற்சி அளித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று திலீப் நடனபள்ளிக்கு புறப்பட தயாரானார். இதற்கு மாயா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இனிமேல் நடன பயிற்சிக்கு சென்றால் தான் குழந்தையுடன் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினார். இதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் திலீப் புறப்பட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த மாயா தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றார். திலீப் இதனை பார்த்து அவர்களை தடுக்காமல் அலட்சியம் செய்ததாக தெரிகிறது. கண் இமைக்கும் நேரத்தில் குழந்தையுடன் மாயா 40 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திலீப் சத்தம்போட்டு கிணறு அருகே ஓடினார். அங்கு தாயும், மகளும் தண்ணீரில் தத்தளித்தனர். அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். கிணற்றில் இறங்கி அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் தண்ணீர் அதிகம் இருந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை.

    இது குறித்த பரவூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தாய்- மகளை மீட்டு பாரிப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பாரிப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேரள மாநிலத்தில் ஆசிரியர் செல்போன் பறித்ததால் மனம் உடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் குமரன்நல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயன்- ஷீலா தம்பதி மகன் ஜிஷ்ணு (வயது 17). இவர் இதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளிக்கூடத்திற்கு செல்போன் எடுத்துவர தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று பள்ளிக்கு செல்போனை ஜிஷ்ணு மறைத்து எடுத்துச்சென்றார். ஆசிரியர் பாடம் நடத்தும்போது செல்போன் மணி அடித்தது. இதனை கவனித்த வகுப்பு ஆசிரியர் செல்போனை மாணவரிடம் இருந்து பறித்தார். பின்னர் மாணவரின் பெற்றோரை வரவழைத்து ரூ.250 அபராதம் செலுத்தும்படி கூறினார். பெற்றோர் அபராதம் செலுத்தினர்.

    பின்னர் பெற்றோருடன் மாணவரையும் ஆசிரியர் வீட்டுக்கு அனுப்பி விட்டார். ஆனால் செல்போனை திருப்பி தரமறுத்து விட்டார். இதில் ஜிஷ்ணு வேதனை அடைந்தார்.

    வீட்டுக்கு சென்ற மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து போலீசார் வழக்குப்பபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×