search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kennedy MLA"

    • தொகுதி மக்கள், தங்கள் பகுதி குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்துவைப்பதற்காக பாராட்டுக்களை தெரிவித்தனர்.
    • காலப்பன், முரளி, கோபி, பிரேம், ஜீவா, ராஜா, இருதயராஜ், ராகேஷ், மோரிஸ், ரகுமான், பஸ்கல், மரி ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகு திகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தி.மு.க. சார்பில் துணை அமைப் பாளரும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தைத்திருநாளை யொட்டி, காலண்டர் மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கினார்.

    அப்போது தொகுதி மக்கள், தங்கள் பகுதி குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்துவைப்பதற்காக பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், நிர் வாகிகள் ரவி, ஹரி கிருஷ்ணன், ராஜி, நோயல், நிசார், விநாயகமூர்த்தி, செல்வம், காலப்பன், முரளி, கோபி, பிரேம், ஜீவா, ராஜா, இரு தயராஜ், ராகேஷ், மோரிஸ், ரகுமான், பஸ்கல், மரி ஆகியோர் உடனிருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. அப்பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
    • ஜெயராமன், பியர், அரிகிருஷ்ணன், செல்வம், ராஜி, ராக்கேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுக்குட் பட்ட எல்லையம்மன் கோவில் வீதியில் தாழ்வாக சாலை இருந்ததால் தற்போது பெய்த மழையால் சாலை உள்வாங்கி மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான கென்னடியிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. அப்பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இப்பணியை கென்னடி

    எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியின் போது நகராட்சி உதவி பொறி யாளர் யுவராஜ், ஒப்பந்ததாரர் பிராங்க்ளின், ஜெயராமன், பியர், அரிகிருஷ்ணன், செல்வம், ராஜி, ராக்கேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • பொதுப்பணித் துறை சார்பில் ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி களுக்கான தொடக்க விழா நடந்தது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அப்துல் கலாம் அரசு குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வெளியேற்றுதலை பாதாள சாக்கடையுடன் இணைக்க பொதுப்பணித் துறை சார்பில் ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி களுக்கான தொடக்க விழா நடந்தது.

    இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென் னடி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சீனு, உத விப்பொறியாளர் ஞானம், பார்த்தசாரதி இளநிலைப் பொறியாளர் ஜெயசந்திரன், தி.மு.க. நிர்வாகிகள் ராஜா கோபால், தங்கவேல், சக்திவேல், ஹரிகிருஷ்ணன், ராஜி, விநாயகமூர்த்தி, ஜோஸ் லின், ராகேஷ், மோரிஸ், ரகுமான், பாஸ்கல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. நகராட்சி அதிகாரிகளுடன் சென்று சாலை அமைக்க இடங்களை அளவீடு செய்தார்.
    • அரிகிருஷ்ணன், சண்முகம், இருதயராஜ், ரவி, ராக்கேஷ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி குட்பட்ட அவ்வைநகர் மற்றும் திருவள்ளுவர் வீதி பகுதியில் புதிய சாலை அமைத்து கொடுக்கும் படி அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான அனிபால் கென்னடியிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. நகராட்சி அதிகாரிகளுடன் சென்று சாலை அமைக்க இடங்களை அளவீடு செய்தார்.

    அப்போது அப்பகுதி மக்கள் திருமூலர் வீதிக்கு பெயர் பலகையும், வாய்க் கால் கட்டை அமைத்து கொடுத்து கொடுக்கும் படி வேண்டுகோள் விடுத்தனர்.

    இதனை ஏற்ற கென்னடி எம்.எல்.ஏ. அதிகாரியிடம் பேசி இப்பணிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியின் போது நகராட்சி செயற்பொறி யாளர் சிவபாலன், உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேலு, அரிகிருஷ்ணன், சண்முகம், இருதயராஜ், ரவி, ராக்கேஷ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்
    • விழாவிற்கு பொறுப்பாசிரியை வசுதா தலைமை தாங்கினார் ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட தாவீதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவினை முன்னிட்டு வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, சிறந்த கையெழுத்துப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

    விழாவில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்துக் கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    விழாவிற்கு பொறுப்பாசிரியை வசுதா தலைமை தாங்கினார் ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்புரையாற்றினார்.

    ஆசிரியை செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியை கனகலட்சுமி நன்றி கூறினார். விழாவில் தி.மு,க. நிர்வாகிகள் சந்துரு, விநாயகமூர்த்தி, ராகேஷ், பஸ்கல் மற்றும் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தல்
    • சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டன. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி புதுவை போலீஸ் டி.ஜிபி., ஸ்ரீனிவாசை சந்தித்து புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி நகரப் பகு தியில் கஞ்சா, போதை மாத்திரை, ஊசி போன்றவை எளிதாக கிடைக்கின்றன.

    இது மிகவும் கவலைக்குரியது. இளைஞர்கள் பொது இடங்களில் வெளிப்படையாக போதைப்பொருள் உட் கொள்கிறார்கள்.

    போலீஸ் நிலையத்தில் லஞ்ச, லாவண்யம் அதிகமாகிவிட்டது. உப்பளம் தொகுதியில் கல்லறை சுடுகாடு, சன்னியாசி தோப்பு, ஆகிய ஆகிய இடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டன. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    ஒதியஞ்சாலை, முதலியார்பேட்டை போலீஸ் நிலைய அதிகாரிகளை மாற்ற வேண்டும். இல் ையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத் தப்படும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    மனுவைப் பெற்றுக் கொண்ட டி.ஜி.பி., ஸ்ரீனி வாஸ், இது குறித்து 15 நாட் களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

    • நேத்தாஜி நகர் பகுதியில் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
    • அரிகிருஷ்ணன், சந்திரன், காளப்பன், செல்வம், கோபி, ரவி, ராக்கேஷ், அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் தொடரும் மழையையொட்டி உப்பளம் தொகுதியில் நோய் பரவாமல் தடுக்க நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் பிரீதாவை கென்னடி எம்.எல்.ஏ. சந்தித்து தொகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.

    மேலும் நேத்தாஜி நகர் பகுதியில் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து வாணரப் பேட்டை பகுதியில் உப்பனாறு தூர்வாரும் பணியை கென்னடி

    எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் தூர் வாரும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.

    இந்நிகழ்ச்சியின் போது தி.மு.க. நிர்வாகிகள் சக்தி வேல், அரிகிருஷ்ணன், சந்திரன், காளப்பன், செல்வம், கோபி, ரவி, ராக்கேஷ், அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • உப்பளம் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், அகிலன், விநாயகம், பாஸ்கல், கவி, மோரிஸ், கார்த்தி, ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் தொகுதி உட்பட்ட வாணரப்பேட்டை தாமரை நகர் பகுதியில் நடைபெற்று வரும் கழிவு நீர் வாய்க்காலையொட்டி அச்சுக்கல் பதிக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வந்த மறைந்த சுதந்திர போராட்ட தியாகி பெரியசாமியின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து தியாகி பெரியசாமியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் திப்புராயபேட்டை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புத்தக பைகளை கென்னடி வழங்கினார்.

    நிகழ்ச்சியின் போது உப்பளம் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், அகிலன், விநாயகம், பாஸ்கல், கவி, மோரிஸ், கார்த்தி, ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • அடையாள அட்டையை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலம் உப்பளம் தொகுதியை சேர்ந்த முதியோர், விதவை, முதிர்கன்னி, திருநங்கை போன்றவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கான அடையாள அட்டையை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான அடையாள அட்டையை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சி யின் போது தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், அரிகிருஷ்ணன், ஆரோக்கியராஜ், விநாயக மூர்த்தி, செல்வம், சேட்டு, நிசார், ரகுமான், பஸ்கல், மற்றும் கடசியின் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    • கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடையில்லா சான்று வழங்க வேண்டும்.
    • தற்போது 3-வது முறையாக கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

     புதுச்சேரி:

    உப்பளம் தொகு திக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலை அவ்வை நகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் சுமார் 35 ஆண்டுகள் பழமையானது.

    மேலும் 2 முறை கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது 3-வது முறையாக கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து கோவிலை புதுப்பித்து கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் அளிக்க கோரி கென்னடி எம்.எல்.ஏ. புதுவை தாசில்தார் பிரீதிவி மற்றும் நகராட்சி ஆணையர் சிவகுமாரிடம் மனு அளித்தார்.

    மேலும் திப்புரா யப்பேட்டையில் அமைந்து ள்ள இடுகாட்டில் பெயர் பலகை அமைக்கவும் மற்றும் மின் விளக்கு தண்ணீர் வசதி செய்துதர வேண்டும் என்று கென்னடி எம்.எல்.ஏ. அவர்களிடம் கேட்டு கொண்டார்.

    இந்நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
    • கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி நோய் பரவுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.

    புதுச்சேரி:

    உப்ப ளம் தொகுதியில் உள்ள உப்பனாறு வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து மலேரியா, டெங்கு, சிக்கன் குனிய தொற்று நோய்கள் உள்ளிட்ட பல் பரவும் அபாயம் இருந்து வந்தது. எனவே கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி நோய் பரவுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.

    அதனடிப்படையில் கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் படி புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மூலம் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதா ரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதனிடையே தொகுதி முழுவதும் நகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. இந்நிலை யில் இதனை தொடர்ந்து உப்பனாறு வாய்க்காலை பொதுப்பணித்துறை சார்பில் பொக் லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி தொடங்கியது.

    இதனை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது பொதுப்பணித் துறை செயற்பொறியார் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியார் சம்மந்தம் உள்ளிட்டோர் இருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • மாநில சட்டமன்றத்தால் நிறைவேற் றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி

    எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

     புதுச்சேரி மாநிலம் முன் எப்போதும் இல்லாத வகையில் பல நெருக்கடி களை சந்தித்து வருகிறது. மாநிலத்தில் நிலவுகின்ற பல்வேறு முக்கியமான பிரச்சினைகளை உடனுக் குடன் தீர்ப்பதற்கு நமக்கு நிதி அதிகாரமும், நிர்வாக அதிகாரமும் இல்லை. இதனை உணர்ந்துதான் மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி நமது மாநிலத்திற்கு முழு அதி காரம் வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசினை வலியுறுத்தி வந்தார்.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத் தொட ரின்போது சட்டசபையில் அனைத்து கட்சி ஆதரவுடன் 14-வது முறையாக மாநில அந்தஸ்து தீர்மானம் ஒரு மனதாக நிறை வேற்ற ப்பட்டது.

    அந்தத் தீர்மானத்தை கவர்னர் காலம் கடந்து அனுப்பி வைத்தார். இந்த நிலையில் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற் றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது. இது புதுச்சேரி மாநில மக்களை அவமா னப்படுத்தும் வித மாக உள்ளது.

    புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டுமென்று கடந்த 1996-2000-ம் ஆண்டில் அமைந்த தி.மு.க. கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருந்த ஜானகிராமன் அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள் இந்திரஜித் குப்தா மற்றும் எல்.கே. அத்வானி உள்ளிட்ட அமைச்சர்களை அனைத்துக் கட்சி பிரதி நிதிகளோடு சந்தித்து, புது வைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதைப்போல் உடன டியாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அது மட்டு மல்லாமல் உடனடியாக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதுச் சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டுமென்று சிறப்பு தீர்மானத்தை நிறை வேற்ற வேண்டும். அந்த தீர்மானத்தோடு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து முறையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×