search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karunanidhi birthday celebration"

    • ஒரிசா மாநிலத்தில் நடந்த ரெயில்விபத்து காரணமாக கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தள்ளி வைப்பதாக தி.மு.க தலைமை கழகம் அறிவித்தது.
    • நத்தம் பகுதியில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ஊர்வலமாக குதிரையில் சவாரி செய்தும், அன்னதானம் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

    நத்தம்:

    தமிழகத்தில் கடந்த 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் ஒரிசா மாநிலத்தில் நடந்த ரெயில்விபத்து காரணமாக கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தள்ளி வைப்பதாக தி.மு.க தலைமை கழகம் அறிவித்தது.

    இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ஊர்வலமாக குதிரையில் சவாரி செய்தும், அன்னதானம் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதனையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக தி.மு.க நிர்வாகிகளான வேலம்பட்டி கந்தசாமி, கொசவபட்டி மரிய ஆரோக்கியம், பூசாரிபட்டி உத்தமன், கண்ணமனூர் கனகராஜ், ராகலாபுரம் சரவணன் ஆகிய 5 பேரையும் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்குவதாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    • கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்தனர்.
    • 7-வது வார்டு சார்பில் விழா.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நகர திமுகவினர் பல்வேறு இடங்களில் இலவச வேட்டி சேலை மற்றும் உணவு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    அரக்கோணம் நகரம் 7-வது வார்டில் நகர திமுகவினர் வட்டச் செயலாளர் பாலாஜி தலைமையில் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி்னர். இலவச வேட்டி சேலை மற்றும் உணவு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி, நகர துணைத்தலைவர் அன்பு லாரன்ஸ், மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன், பூக்கடை அரி, நகர மாணவரணி அமைப்பாளர் பொன்னரசு, வட்ட பிரதிநிதி சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கீழப்பாவூர் பேரூர் தி.மு.க. சார்பில் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
    பாவூர்சத்திரம்:

    கீழப்பாவூர் பேரூர் தி.மு.க. சார்பில் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூர் செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபாலன் வரவேற்றார். ஊராட்சி செயலர் மதிச்செல்வன் தொகுத்து வழங்கினார். 

    கூட்டத்தில் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் சிவபத்மநாதன், தலைமைக்கழக பேச்சாளர்கள் சரத்பாலா, வேங்கை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் நிர்வாகிகள் ராஜாமணி, மேகநாதன், தளபதி முருகேசன், நாகராஜ், பொன்லதா சிவகுமார், ராஜேந்திரன், தங்கசாமி, சிவன், மாடசாமி, ஆறுமுகநயினார், ராஜன், ராமசாமி, வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் குமணன் நன்றி கூறினார்.
    காரையூரில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா  பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து தலைமை தாங்கினார். மாவட்ட துணை செய லாளர்சின்னையா, பொதுக் குழுஉறுப்பினர் தென்ன ரசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் லியோனி சிறப்புரையாற்றினார்.

    இதில் நகரச்செயலாளர் அழகப்பன், மாவட்டப் பிரதிநிதிகள் சிக்கந்தர், விஜயன், துணைச்செயலாளர்கள் திலகவதி முருகேசன், கண்ணன், பாஸ்கரன், முன்னாள் ஒன்றியச்செயலாளர் நாகராஜன், ஒன்றிய அவைத்த லைவர் மீராகனி,  நிர்வாகிகள் கணேசமூர்த்தி, முரளிதரன், மணிமாறன், திருப்பதி, சின்னையா, அண்ணாத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    முன்னதாக மாவட்ட பிரதிநிதி தவசுமணி வரவேற்று பேசினார். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதிதாசன் நன்றி கூறினார். தொடக்கத்தில் முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் ராஜீவின் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    ×