search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanyakumari Bhagavathi amman"

    பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர், பகவதி அம்மனுக்கு காணிக்கையாக 24 பவுன் எடை கொண்ட தங்க கனகமணி மாலையை காணிக்கையாக வழங்கி உள்ளார்.
    கன்னியாகுமரி:

    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய், தங்கம், வெளிநாட்டு பணம் என உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்கள்.

    இந்தநிலையில் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் முருகன், பகவதி அம்மனுக்கு காணிக்கையாக 24 பவுன் எடை கொண்ட தங்க கனகமணி மாலையை காணிக்கையாக வழங்கி உள்ளார்.

    நேற்று அந்த தங்க மாலை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கோவில் மேலாளர் ஆறுமுக நயினாரிடம், தொழில் அதிபர் முருகன், தங்க மாலையை ஒப்படைத்தார். தொடர்ந்து அந்த மாலை பகவதி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    நிகழ்ச்சியில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன், மேல் சாந்திகள் மணிகண்டன் போற்றி, பத்மநாபன் போற்றி, ராதாகிருஷ்ணன் போற்றி, விட்டல் போற்றி, வனஜா, விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. 2-ம் திருவிழாவான நேற்று மாலை 6 மணிக்கு சமய உரை, 8 மணிக்கு பக்தி பஜனை, 9 மணிக்கு கிளி வாகனத்தில் தேவி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன.

    3-ம் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு அன்ன வாகனத்தில் தேவி வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது.

    8 மணிக்கு கன்னியாகுமரி வடக்கு தெரு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.

    இன்று மாலை 6 மணிக்கு முருக பக்தர்கள் நடத்தும் பஜனை நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு அன்ன வாகனத்தில் தேவி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 8.30 மணிக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் 17-ந் தேதி காலை தேரோட்டம், 18-ந் தேதி காலை முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி, இரவில் தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறுகிறது.

    வைகாசி விசாக திருவிழாவுக்கான கால் நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. கோவிலின் கிழக்கு வாசலில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோவிலின் பிரதான நுழைவு வாயில் அருகில் மேல்சாந்தி பத்மநாபன் போற்றி பூஜைகள் செய்து கால் நாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, மாவட்ட கோவில்களின் தலைமை அலுவலக மேலாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன், வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கோடைக்காலத்தை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு பானகாரம் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த வழிபாடு 60 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. இதனால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடைக்காலமான பங்குனி, சித்திரை மாதங்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பானகாரம் படைத்து வழிபடுவது வழக்கம். இந்த வழிபாடு மொத்தம் 60 நாட்கள் நடைபெறும்.

    இதையொட்டி தினமும் மாலை 4 மணிக்கு நடை திறந்ததும், எலுமிச்சை பழம், சர்க்கரை, ஏலக்காய், சுக்கு, புளி போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட பானகாரம் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெறும். பின்னர், அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இந்த பானகாரம் அருந்தினால், வெப்பம் சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால், இந்த பிரசாதத்தை பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதை தொடர்ந்து பானகாரம் வழிபாடு நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து 60 நாட்கள் இந்த வழிபாடு நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார், தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் செய்துள்ளனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி வெள்ளி கலைமான் வானத்தில் பகவதி அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 10-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவில் 2-ம் நாளான நேற்று முன்தினம் வணிகத்துறை சார்பில் மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வாகன பவனி நடைபெற்றது.

    3-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு சென்னை பி.கே.ஆர் குரூப்ஸ் நிறுவனத்தலைவர் டி.ஆர். பாலகிருஷ்ணன்ராஜா ஏற்பாட்டில் பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், கலபம், குங்குமம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. மதியம் அன்னதானம், மாலை சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசையும், 9 மணிக்கு கலைமான் வாகனத்தில் அம்மன் வாகன பவனி ஆகியவை நடைபெற்றது.
    கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.
    கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 10-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அபிஷேகமும், காலை 9.15 மணிக்கு அம்மன் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 10 மணிக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருதல் ஆகியன நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில், அம்மன் வாகனத்தில் பவனி வருதல், அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    19-ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதியம் 12.15 மணிக்கு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நிகழ்ச்சியில் அம்மனுக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். பின்னர் மேள, தாளம் முழங்க அம்மன் மகாதானபுரம் சந்திப்பு நோக்கி ஊர்வலமாக புறப்படுவார். மாலை 6.30 மணிக்கு மகாதானபுரம் சந்திப்பில் அமைந்துள்ள காரியக்காரமடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து நரிக்குளம் அருகே பணாசூரன் என்ற அரக்கனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்வு நடைபெறுகிறது.

    தொடர்ந்து அம்மன் பல்லக்கு வாகனத்தில் பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம் வழியாக கோவிலை சென்றடைந்ததும் முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அம்மன் கிழக்குவாசல் வழியாக கோவிலுக்குள் செல்வார்.

    விழா ஏற்பாடுகளை திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் சிவ ராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருகிற 11-ந் தேதி ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடக்கிறது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருகிற 11-ந் தேதி ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு அபிஷேகம், ஆடி களபபூஜை, ஸ்ரீபலிபூஜை, தீபாராதனை, உஷபூஜை, உச்சிகால பூஜை போன்றவைகள் நடைபெறுகிறது.

    இந்த பூஜைகள் நடக்கும் போது பக்தர்கள் தரிசனத்துக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அதன்பிறகு 5 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்காக கோவிலின் பிரதான நுழைவுவாயில் திறக்கப்படுகிறது. ஆடி அமாவாசையையொட்டி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படும். மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக 1 மணி வரை கோவில்நடை திறக்கப்பட்டு இருக்கும்.

    அன்று இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும், வருடத்தில் 5 விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கிழக்கு வாசல் அன்றைய தினம் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    ஆடி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடலில் புனிதநீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்மபூஜை, தர்ப்பணம் செய்வார்கள். பின்னர் பக்தர்கள் ஈரத்துணியுடன் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதிஅம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவார்கள்.

    ஆடி அமாவாசை அன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் கேரளாவின் தென்பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரி கடலில் புனித நீராடுவதற்காக குவிவார்கள்.

    கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடம் தற்போது பக்தர்கள் புனித நீராட முடியாத அளவுக்கு காணப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி என்ற ஆழிபேரலையின் கோரத் தாண்டவத்தினால் இடிபாடுகளுக்கு உள்ளான கட்டிடங்களின் கற்களும், பாறாங்கற்களும் முக்கடல் சங்கம பகுதியில் குவிந்து கிடக்கின்றன. சுனாமி தாக்குதல் முடிந்து 13 ஆண்டுகள் கடந்த பின்பும் இந்த ராட்சத பாறாங்கற்கள் இதுவரை அகற்றப்பட வில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் முக்கடல் சங்கமத்தில் புனித நீராட முடியாத அவலநிலை ஏற்பட்டு உள்ளது. அதையும் மீறி புனித நீராடும் பக்தர்களுக்கு கை, கால்களில் ரத்தக்காயம் ஏற்படும் பரிதாப நிலை ஏற்படுகிறது.

    தற்போது ஆடி அமாவாசை நெருங்கி வரும் நிலையில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குவிந்து கிடக்கும் பாறாங்கற்களை அகற்ற மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி பேரூராட்சி மற்றும் இந்து அறநிலையத்துறை ஆகியன இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது. இந்த களப பூஜை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடக்கிறது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை நேற்று தொடங்கியது. இந்த களப பூஜை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தினமும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக பூஜை நடக்கிறது. முதல் நாளான நேற்று திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட தங்கக்குடத்தில் சந்தனம், களபம், பச்சை கற்பூரம், ஜவ்வாது, கோரோசனை, பன்னீர், அகில் போன்றவற்றை நிரப்பி கலசபிறையில் வைத்து மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரூ பூஜை செய்தார்.

    அதன்பிறகு களபம் நிரப்பப்பட்ட அந்த தங்ககுடத்தை பஞ்சவாத்தியம், மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அந்த சிறப்பு அபிஷேகத்தை கோவில் தந்திரி சங்கர நாராயணரூ தலைமையில் கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன், ராதாகிருஷ்ணன், விட்டல், பத்மநாபன் மற்றும் கீழ்சாந்திகள் நடத்தினர். இந்த களப பூஜையில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார், கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், நெல்லை மண்டல மேலாளர் ராமச்சந்திரன், தென் மண்டல பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    களபாபிஷேகம் முடிந்த பிறகு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட களபம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தங்க ஆபரணங்கள், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கார தீபாராதனையும், மதியம் அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் தீபாராதனையும், இரவு புஷ்பாபிஷேகமும் நடந்தது.

    இந்த ஆடிகளப பூஜை வருகிற 10-ந் தேதி வரை நடைபெறும். 11-ந் தேதி காலை 10 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தின் தெற்கு பக்கம் உள்ள மண்டபத்தில் அதிவாச ஹோமம் என்ற பிரமாண்டயாகம் நடக்கிறது.
    ஒளிமிக்க கன்னியாகுமரி பகவதி அன்னையின் மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது.
    பாரத தேசத்தைப்பரதன் ஒன்பது பிரிவுகளாக்கி இந்திரன், சுசேரு, தம்பீரபருணன், கபத்திமா, நாகன், சந்திரன், கந்தருவன், வருணன் உள்ளிட்ட எட்டு மகன்களிடமும், குமரி என்ற ஒரு மகளிடமும் அளித்தான். குமரிக்கு தென்பாகத்தை ஆட்சி செய்ய ஒப்படைத்தனர்.

    இத்தலத்தில் உலக மாதா அம்சமான பகவதிதாய் புட்பகாசி தவம் செய்திருந்தாள். மூன்று யுகங்களாகப் பூஜை செய்வதைக் கண்டு மகிழ்ந்த ஈஸ்வரன், “வேண்டிய வரம் கேள்” என்றார்.

    அப்போது பகவதி அம்மன் “உலக அழிவு காலத்தில் உம்முடன் இணைந்து மகிழ்ந்திருக்க வேண்டும்“ என்று வரம் கேட்டாள். அவ்வாறே செய்வோம் அதுவரை தென்கடற்கரையில் சப்தமாதர் தோழிகளாயிருக்க இலுப்பைப் பூமாலை ஏற்று இடக்கையைத் தொடைமேல் வைத்துத் தவம் செய். கன்னிகா சேத்திரம், ஞானவாசம், தவத்தலம் என்று இத்தலம் அழைக்கப்படும். நாம் பிரமச்சாரியாய் வந்திருப்போம்” என்றார்.

    சிவபெருமானை திருமணம் புரிய விரும்பி கன்னியாகுமரியில் பகவதி அம்மன் தவமிருந்தாள். ஆனால், சிவன் வராமல் போகவே கோபத்தில் இருந்த பகவதி தேவியை திருமணம் செய்து கொள்ளுமாறு பாணாசுரன் வற்புறுத்தினான். இதனால் மேலும் கோபமாகி அசுரனை அழித்தாள் அன்னை பகவதி.

    தேவர்களின் வேண்டுதலால் சினம் தணிந்து, தனது கோப சக்தியை எல்லாம் ஒரு ஒற்றைக்கல் மூக்குத்தியில் இறக்கி அன்னை பகவதி சாந்தமானாள். அவள் குமரியாகவே அங்கு வீற்றிருந்ததால் ‘கன்னியாகுமரி’ என்றே பெயர் பெற்றாள். இந்த மூக்குத்தியின் ஒளியை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணி வந்த கப்பல்கள் கரையில் மோதி விபத்துக்குள்ளானதாம்.

    அதனாலேயே ஆலயத்தின் கடற்கரை நோக்கிய முன் கோபுரவாசல் மூடப்பட்டு வடக்குப்புறமாக வாசல் வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். ஒளிமிக்க அன்னையின் மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் பகவதி தாய் நின்று நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாள்.

    ‘நீலத்திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை’ என்று பாரதி போற்றியவாறு குமரித் தெய்வத்தின் கோவில் கடலோரமாகஅமைந்து காட்சி தருகின்றது. பெரிய நிலப்பரப்பில் நான்குபுறமும் மதில் சுவர்கள் சூழ அந்த கோவில் அமைந்துள்ளது.

    பகவதி அம்மனின் கருவறை உள்மண்டபத்திலே அமைந்திருக்கின்றது. இளங்காலைக் கதிரவனுக்கு ஆசி கூறி அருள்வது போன்று குமரித் தெய்வம் கிழக்கு திசை நோக்கிய வண்ணம் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றாள். அவளது மணிமுடியிலே பிறைமதி காட்சி தருகின்றது.

    அவள் அணிந்திருக்கும் வைர மூக்குத்தி கண்களைப் பறிக்கும் பிரகாசமுடையதாகத் திகழ்கிறது. பகவதி தாய் தனது ஒரு கரத்திலே இலுப்பைப்பூ மாலையைத் தரித்து, மற்றொரு கரத்தைத் துடைமீது அமர்த்தி தவக்கோலத்திலே காட்சியளிக்கிறாள்.

    பகவதித் தாயின் மூக்குத்தி மின்னும் முகப்பொலிவும், கருணை பொழிந்திடும் இரு கண்களும், புருவங்களும், பரந்த நெற்றியும், அதில் ஒளி வீசித் திகழும் மாணிக்கத் திலகமும், இதழ்களின் கோடியில் தெரிந்திடும் புன்முறுவலும், நிமிர்ந்த தோற்றப் பொலிவும் காண்போர்க்கு ஒரு பேரின்ப விருந்தாக அமையும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.

    இக்கோவிலின் உள் பிரகாரத்துத் தென்மேற்குக் கோடியில் விநாயகர் சந்நிதி உள்ளது. அங்குள்ள மணி மண்டபம் ஆறு தூண்களைக் கொண்டதாகும். இம்மண்டபத்தின் முன்பாக சபா மண்டபம் அமைந்துள்ளது.

    உள்பிரகாரத்தைவிட அகன்ற இடைவெளியுடன் கூடியதாக வெளிப்பிரகாரம் அமைந்துள்ளது. நாள்தோறும் அன்னை பகவதி இப்பிரகாரத்தில் பவனி வருகிறாள்.

    கன்னியாகுமரி பகவதி அம்மனை கன்னிகா பூஜை அல்லது சுயம்வர பூஜை செய்து மனம் உருக வழிபட்டால் எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் விலகி உடனே திருமணம் கை கூடிவிடும். காசிக்கு செல்பவர்கள் இங்கு வந்து சென்றால் கூடுதல் பலன்களை பெற முடியும்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு விழா நடந்தது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆன்மிக சொற்பொழிவு, சப்பர பவனி, வாகன பவனி போன்றவை நடந்து வந்தன.

    9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    10-ம் திருவிழாவான நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், களபம், சந்தனம், குங்குமம், தயிர் போன்ற பொருட்களால் அஷ்டாபிஷேகம் நடந்தது.

    காலை 9 மணிக்கு அம்மன் ஆறாட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனை மேளதாளம் முழங்க சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி வழியாக கிழக்கு வாசல் கடற்கரையில் உள்ள ஆறாட்டு மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன், விட்டல், ராதாகிருஷ்ணன், பத்மநாபன், கீழ் சாந்திகள் ஸ்ரீதர், சீனிவாசன், ராமகிருஷ்ணன் ஆகியோர் பூஜைகள் நடத்தினர். உற்சவ அம்பாளையும், ஸ்ரீ விக்ரகத்தையும் முக்கடல் சங்கமத்துக்கு எடுத்து சென்று ஆறாட்டு நடத்தினர்.

    பின்னர் வருடத்தில் 5 முக்கிய தினங்களில் மட்டும் திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில், கோவில் மேலாளர் சிவராமசந்திரன், தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன், கோட்டார் இளங்கடை பட்டாரியார் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் தலைவர் சொக்கலிங்கம், நிர்வாகி இளங்கோ உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
    கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 19-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது.

    இதையொட்டி கால் நாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை போன்றவை நடந்தது.

    தொடர்ந்து மலர்கள் மற்றும் மா இலை தோரணங்களால் திருக்கால் அலங்கரிக்கப்பட்டு கிழக்கு வாசலில் இருந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கோவிலின் வடக்கு வாசலில் உள்ள நுழைவு பகுதியில் கால்நாட்டப்பட்டது.

    குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, மேல்சாந்தி மணிகண்டன் ஆகியோர் கால் நாட்டினர். தொடர்ந்து பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

    நிகழ்ச்சியில், கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வைகாசி விசாக திருவிழா நாட்களில் காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடக்கிறது. மாலையில் பக்தி சொற்பொழிவு, வாகன பவனி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    27-ந்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 28-ந் தேதி இரவு 9.30 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறும். 
    ×