என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 10-ந் தேதிதொடங்குகிறது
Byமாலை மலர்8 Oct 2018 3:10 AM GMT (Updated: 8 Oct 2018 3:10 AM GMT)
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 10-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அபிஷேகமும், காலை 9.15 மணிக்கு அம்மன் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 10 மணிக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருதல் ஆகியன நடக்கிறது.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில், அம்மன் வாகனத்தில் பவனி வருதல், அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
19-ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதியம் 12.15 மணிக்கு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சியில் அம்மனுக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். பின்னர் மேள, தாளம் முழங்க அம்மன் மகாதானபுரம் சந்திப்பு நோக்கி ஊர்வலமாக புறப்படுவார். மாலை 6.30 மணிக்கு மகாதானபுரம் சந்திப்பில் அமைந்துள்ள காரியக்காரமடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து நரிக்குளம் அருகே பணாசூரன் என்ற அரக்கனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்வு நடைபெறுகிறது.
தொடர்ந்து அம்மன் பல்லக்கு வாகனத்தில் பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம் வழியாக கோவிலை சென்றடைந்ததும் முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அம்மன் கிழக்குவாசல் வழியாக கோவிலுக்குள் செல்வார்.
விழா ஏற்பாடுகளை திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் சிவ ராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில், அம்மன் வாகனத்தில் பவனி வருதல், அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
19-ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதியம் 12.15 மணிக்கு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சியில் அம்மனுக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். பின்னர் மேள, தாளம் முழங்க அம்மன் மகாதானபுரம் சந்திப்பு நோக்கி ஊர்வலமாக புறப்படுவார். மாலை 6.30 மணிக்கு மகாதானபுரம் சந்திப்பில் அமைந்துள்ள காரியக்காரமடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து நரிக்குளம் அருகே பணாசூரன் என்ற அரக்கனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்வு நடைபெறுகிறது.
தொடர்ந்து அம்மன் பல்லக்கு வாகனத்தில் பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம் வழியாக கோவிலை சென்றடைந்ததும் முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அம்மன் கிழக்குவாசல் வழியாக கோவிலுக்குள் செல்வார்.
விழா ஏற்பாடுகளை திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் சிவ ராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X