search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jacto Jio protest"

    • திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மெல்கி ராஜா சிங், மாவட்ட தலைவர் ஜம்பு ஆகியோர் தலைமை தாங்கினர்.

    திருவள்ளூர்:

    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மற்றும் நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மெல்கி ராஜா சிங், மாவட்ட தலைவர் ஜம்பு ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மாநில துணைத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சீ.காந்திமதிநாதன் வரவேற்றார்.

    இதில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஞானசேகரன், எஸ்.பிரபாகரன், மாநில சட்டச்செயலாளர் ஆர்.குப்புசாமி மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் 27-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. #JactoJio
    சேலம்:

    சேலம் ஜவகர்மில் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் இன்று பிற்பகல் ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கிறது.

    இந்த மாநாட்டில் வருகிற நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    1-3-2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு கால முறை தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்துவிட்டு அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    21 மாத கால ஊதிய குழுவில் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், 5 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடுவதை முழுமையாக கைவிட வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் இன்று மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதில் இருந்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் அரசு பணிகள் பாதிக்கும். அரசு பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்படும்.

    இதுவரை இருந்த எல்லா முதல்-அமைச்சர்களும் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அழைத்து பேசுவார்கள். ஆனால் தற்போதுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எங்களை அழைத்து பேசவில்லை.

    ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி 5-ம் வகுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு 82 ஆயிரம் சம்பளம் வழங்குவதாக கூறி வருகிறார்கள். குடிகாரர்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதாக அநாகரீகமாக பேசி வருகிறார்.

    இதனால் இதை கண்டிக்கும் வகையில் சேலத்தில் அவரது வீட்டின் அருகே இந்த மாநாடு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoJio
    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கும் எழிலகத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி. தினகரன் வந்தார். போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
    சென்னை:

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கும் எழிலகத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி. தினகரன் வந்தார். போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு ஊழியர்-ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானது. 3 நாட்களாக அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களை முதல்வர், அமைச்சர்கள், சந்திக்கவில்லை. இன்றைக்கு குருட்டு அரசாங்கம் நடந்து வருகிறது. ஒரு தலைகீழான அரசாங்கத்தில் மக்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

    தொடர்ந்து அரசியலில் இருக்க விரும்புகிறவர்கள் மக்கள் பணியை ஆற்ற நினைப்பவர்கள் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி செய்வார்கள். இவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய விரும்பவில்லை. இந்த அரசு மக்கள் விரோத அரசாக உள்ளது. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று கூறுகிறார்கள். சட்டியில் கொண்டு வந்து சேர்ப்பது அரசின் வேலை. ஆனால் இவர்கள் சட்டியில் இருந்து சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.


    பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக யாரையும் பலி கொடுக்க தயாராகி விட்டார்கள். ஈவு இரக்கம் இவர்களுக்கு இல்லை. அதனால் உங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருப்பதை கைவிட வேண்டும். உங்களுக்கு இந்த அரசிடம் நியாயம் கிடைக்காது. இந்த ஆட்சி நீடிக்கப் போவதில்லை. நான் இதை அரசியலுக்காக பேசவில்லை. உங்கள் வாக்குகளுக்காக பேசவில்லை. உங்கள் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. அதனால் எப்போது தேர்தல் வந்தாலும் ஆட்சி அமைப்போம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    மக்கள் பிரச்சனையை தீர்க்க முன் வரமாட்டார்கள். போராட்டம் முற்றி உயிர்ப்பலி ஏற்பட்ட பிறகு ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என்று இழப்பீடு வழங்குவார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்போது வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் தீர்ப்பு எங்களுக்கு நியாயமாகவும், சாதகமாகவும் அமையும்.

    காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதரணியை சட்டசபையில் இருந்து வெளியேற்றிய சம்பவம் ஜெயலலிதா இருந்திருந்தால் நடந்து இருக்காது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டி.டி.வி.தினகரனுடன் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, செந்தமிழன் மற்றும் வெற்றிவேல், வி.எஸ்.பாபு, சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர். #TTVDhinakaran #JactoJio
    ×