search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Independent MLA"

    • கடந்த 2 நாட்களாக தொகுதி நிகழ்ச்சிகளில் பைக்கில் சென்று பங்கேற்று வருகிறார்.
    • மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு காருக்கு டீசல் போட மாதம் ரூ.30 ஆயிரம் தரப்படுகின்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் கடந்த 22-ந் தேதி இடைக்கால கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அரசு காரில் வந்து இறங்கினர்.

    ஆனால் திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., அங்காளன் மட்டும் தனது உதவியாளரின் பைக்கில் வந்து கலந்து கொண்டார்.

    அரசு கொடுத்த கார் அடிக்கடி பழுதாகி விடுவதால் தனது வீடான செல்லிப்பட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டு சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தாக தெரிவித்தார்.

    மேலும் தனக்கு புதிய காரை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

    ஆனாலும், அவருக்கு புதிய கார் வழங்கப்படவில்லை. இதனையடுத்து அதிருப்தியடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. தனக்கு கொடுக்கப்பட்ட அரசின் காரை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து கார் சாவியை கொடுத்து காரை ஒப்படைத்தார். கடந்த 2 நாட்களாக தொகுதி நிகழ்ச்சிகளில் பைக்கில் சென்று பங்கேற்று வருகிறார். இது குறித்த அங்காளன் எம்.எல்.ஏ., கூறியதாவது:-


    எனக்கு கொடுக்கப்பட்ட அரசு கார் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஓடாமல் முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் வைத்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அந்த காரை பட்டி பார்த்து புதிய கார் போல் என்னிடம் வழங்கினர்.

    ஆனால் கார் எங்கு போனாலும் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது.

    இதேபோல் மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு காருக்கு டீசல் போட மாதம் ரூ.30 ஆயிரம் தரப்படுகின்றது. ஆனால் எனக்கு காருக்கு டீசல் போட பணம் தருவதில்லை. காரின் ஆவணங்களையும் வழங்கவில்லை. இதனால் எனக்கு காரே வேண்டாம் என்று சபாநாயகரை சந்தித்து சாவியுடன் ஒப்படைத்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மற்றவர்களுக்கு புதிய கார் தந்துள்ளனர். எனக்கு இயங்கும் காரைக்கூட சீரமைத்து தரவில்லை.
    • மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டி வர அவர் பின் சீட்டில் அமர்ந்து வந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன்.

    இவர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். இவருக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டிருந்தது. இந்த கார் பழுதடைந்து விட்டது. இதனால் பழைய காரை மாற்றி, புதிய கார் வழங்கும்படி சட்டசபை செயலகத்திடம் ஒப்படைத்திருந்தார். ஆனால் அவருக்கு மாற்று காரோ, பழைய காரை பழுது நீக்கியோ தரப்படவில்லை.

    இதனால் அங்காளன் எம்.எல்.ஏ. தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் திருபுவனை தொகுதியிலிருந்தே மோட்டார் சைக்கிளில் சட்டசபைக்கு வந்தார். மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டி வர அவர் பின் சீட்டில் அமர்ந்து வந்தார்.

    இதுகுறித்து அங்காளன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    எம்.எல்.ஏ.வான எனக்கு அரசு தரப்பில் வழங்கிய கார் பழுதடைந்தது. பலமுறை காரை மாற்றித் தரக்கோரி அதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால், அவர்கள் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்றவர்களுக்கு புதிய கார் தந்துள்ளனர். எனக்கு இயங்கும் காரைக்கூட சீரமைத்து தரவில்லை. அதிருப்தியடைந்தாலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்தேன் என தெரிவித்தார்.

    • புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது ஊழல் புகார் கூறி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது ஊழல் புகார் கூறி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

    எம்.எல்.ஏ. போராட்டம் குறித்து தகவலறிந்த அவரின் ஆதரவாளர்கள் திருபுவனை தொகுதியிலிருந்து சட்டசபை முன்பு குவிய தொடங்கினர். இதையடுத்து சட்டசபையின் இருபுறமும் போலீசார் பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இருப்பினும் சட்டசபை முன்பு திரண்ட ஆதரவாளர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பதாகைகளில் திருபுவனை தொகுதியை புறக்கணிக்காதே, பா.ஜனதா வளர்ச்சியை தடுக்காதே என குறிப்பிட்டிருந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் இன்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிடம் தனது ஆதரவை தெரிவித்தார். #KarnatakaCongress #IndependentMLA
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க பா.ஜ.க. ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகேஷ் மற்றும் சங்கர் ஆகிய இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கடந்த மாதம் திரும்பப் பெற்றனர். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் இன்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிடம் தனது ஆதரவு கடிதத்தை அளித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரும் உடனிருந்தார். #KarnatakaCongress #IndependentMLA
    ×