என் மலர்
நீங்கள் தேடியது "Independent MLA"
- புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது ஊழல் புகார் கூறி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது ஊழல் புகார் கூறி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
எம்.எல்.ஏ. போராட்டம் குறித்து தகவலறிந்த அவரின் ஆதரவாளர்கள் திருபுவனை தொகுதியிலிருந்து சட்டசபை முன்பு குவிய தொடங்கினர். இதையடுத்து சட்டசபையின் இருபுறமும் போலீசார் பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும் சட்டசபை முன்பு திரண்ட ஆதரவாளர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பதாகைகளில் திருபுவனை தொகுதியை புறக்கணிக்காதே, பா.ஜனதா வளர்ச்சியை தடுக்காதே என குறிப்பிட்டிருந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் இன்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிடம் தனது ஆதரவை தெரிவித்தார். #KarnatakaCongress #IndependentMLA
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க பா.ஜ.க. ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகேஷ் மற்றும் சங்கர் ஆகிய இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கடந்த மாதம் திரும்பப் பெற்றனர். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் இன்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிடம் தனது ஆதரவு கடிதத்தை அளித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரும் உடனிருந்தார். #KarnatakaCongress #IndependentMLA