search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "home garden"

    • லாவண்டர் செடி, மகரந்த சேர்க்கைக்கு வித்திடும் குணாதிசயம் கொண்டது.
    • வசீகரிக்கும் தோற்றம் மட்டுமல்ல நறுமணமும் கொண்டது.

    வீட்டில் செடிகள் வளர்க்க ஆசைப்படுபவர்கள், தாங்கள் நிர்வகிக்கும் மினி தோட்டத்தில் லாவண்டர் செடியையும் நிச்சயம் இடம்பெற செய்ய வேண்டும். அதற்கான 6 காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    வசீகரிக்கும் நறுமணம்

    லாவண்டர் செடி வசீகரிக்கும் தோற்றம் மட்டுமல்ல நறுமணமும் கொண்டது. அதன் பூக்கள் இனிமையான வாசனை தரக்கூடியவை. அவற்றை நுகர்வது மனதை தளர்வடையச் செய்யும். மனதையும் சாந்தப்படுத்தி அமைதியடையச் செய்யும்.

    வீட்டுத்தோட்டத்தில் லாவண்டர் செடியை வளர்த்தால் அதன் நறுமணம் ஒட்டுமொத்த தோட்டத்திலும் பரவி இருக்கும். அங்கு சென்றாலே இனிமையான சூழலை உணர முடியும். லாவண்டர் பூக்களை வீட்டின் உள் அறைகளில் ரோஜா மலர் இதழ்களை போல் உதிர்த்து, அலங்கரித்து வைத்தால் அதன் வாசனை வீடெங்கும் பரவி புத்துணர்ச்சியூட்டும்.

     மகரந்த சேர்க்கைக்கு வித்திடும்

    லாவண்டர் செடி, மகரந்த சேர்க்கைக்கு வித்திடும் குணாதிசயம் கொண்டது. தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் உள்பட செடிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகளை உங்கள் தோட்டத்திற்கு வர வழைத்துவிடும். லாவண்டர் செடியை வளர்ப்பதன் மூலம் தோட்டச் செடிகள் பூத்துக்குலுங்கி காய்ப்பதற்கு அத்தியாவசிய தேவையான மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கு நீங்கள் புகலிடத்தை உருவாக்குகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இப்படி மற்ற தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்பில் இந்த செடி முக்கிய பங்கு வகிக்கிறது. மகரந்தச் சேர்க்கை தடையின்றி நடைபெறுவதன் மூலம் காய்கறிகள், பழங்கள் விளைச்சல் அதிகரிப்பதற்கு வித்திடக்கூடியது.

    அழகான அலங்கார செடி

    லாவண்டர் நறுமண செடி மட்டுமல்ல, அற்புதமான அலங்கார தாவரமாகும். அதன் மெல்லிய, வெளிர் பச்சை நிற பசுமையான தண்டு, வெள்ளை மற்றும் ஊதா நிறம் கலந்த பூக்களின் அடுக்கடுக்கான கிளை பகுதிகள் பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கும். லாவண்டர் செடியை அழகான பூந்தொட்டிகளில் நட்டு வளர்த்தால் இன்னும் வசீகரமாக தோற்றமளிக்கும்.

      மருத்துவ பயன்பாடு

    லாவண்டர் அரோமாதெரபி மற்றும் மருத்துவத்தில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருக்கிறது. லாவண்டர் பூக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மனதை அமைதிப்படுத்தும் பண்புகளை கொண்டது. மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும் அரோமாதெரபியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. லாவண்டர் எண்ணெய்யை சரும எரிச்சல் மற்றும் சிறிய வெட்டுக்காயங்களுக்கு பயன்படுத்தலாம்.

    குறைந்த பராமரிப்பு

    செடிகளை பராமரிப்பதற்கு போதிய நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு லாவண்டர் சரியான தேர்வாக அமையும். இது ஓரளவுக்கு வறட்சியை தாங்கக்கூடியது. அதனால் குறைந்தபட்ச கவனிப்பு முறையை கையாண்டாலே போதுமானது. சூரிய ஒளியை அது விரும்பும். வெயில் உக்கிரமாக இருந்தாலும் கூட தாக்குப்பிடித்து வளரக்கூடியது. அதனால் அதிக வெயில், வறண்ட கால நிலை நிலவும் பகுதிகளில் வளர்க்க ஏற்றது. பூக்கள் பூத்த பிறகு நேர்த்தியாக கத்தரித்துவிட்டால் ஒரே அளவில் வடிவம் மாறாமல் அழகுற வளரக்கூடியது.

     தூக்கத்திற்கு உதவும்

    லாவண்டரின் அமைதியான பண்புகள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. படுக்கை அறையில் லாவண்டர் செடியை வைப்பது, டிப்யூசர் எனப்படும் உமிழும் கருவியில் லாவண்டர் எண்ணெய்யை பயன்படுத்துவது நிம்மதியான தூக்கத்திற்கு பங்களிக்கும். அமைதியான வாசனையை அனுபவிக்க விரும்பினாலும், மகரந்த சேர்க்கைக்கு நன்மை பயக்கும் பூச்சிகளை வரவழைக்க முயற்சித்தாலும் லாவண்டர் உங்கள் வீட்டுத்தோட்டத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

    • சிறுதானியங்கள் குறித்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வருகிறது.
    • தோட்ட க்கலைத்துறையின் சார்பில் மாவட்டத்திலுள்ள 20 அங்கன்வாடி மைங்களில் வீட்டுதோட்டம் அமைப்ப தற்கு விதைகள் மற்றும் முருங்கை, பப்பாளி, எலுமிச்சை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போர்ஷன் பக்கோடா இரு வாரத்தினை முன்னிட்டு அங்கன்வாடி மையங்களில் வீட்டு த்தோட்டம் அமைப்ப தற்கான விதைகள் மற்றும் மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் போர்ஷன் பக்கோடா இரு வாரத்தினை முன்னிட்டு மார்ச்-20 முதல் ஏப்ரல்-03 வரை சிறுதானியங்கள் குறித்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வருகிறது. அதன டிப்படையில் தோட்ட க்கலைத்துறையின் சார்பில் மாவட்டத்திலுள்ள 20 அங்கன்வாடி மைங்களில் வீட்டுதோட்டம் அமைப்ப தற்கு விதைகள் மற்றும் முருங்கை, பப்பாளி, எலுமிச்சை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையில் ஊட்டச்சத்து உறுதிமொழி யினை அரசு அலுவலர்கள், பணியாளர்கள், அங்க ன்வாடி பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர். மேலும், சிறுதானியங்களை பயன்படுத்தி தயாரிக்க ப்பட்ட சிறுதானிய உணவு களை கலெக்டர், அலுவ லர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினார்.

    தனி வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைப்பது அனைவருக்கும் சாத்திமான ஒன்றுதான் என்று தோட்டக்கலை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.
    தனி வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைப்பது அனைவருக்கும் சாத்திமான ஒன்றுதான் என்று தோட்டக்கலை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். சிறு அளவிலான காலி இடம் இருந்தாலும் போதும். அதை வைத்து நமக்கு தேவையான காய்கறிகளை விளைவிக்கலாம். அதுவும் குறைந்த பட்ஜெட் அல்லது பெரிய அளவிலான செலவுகள் இல்லாமல் செய்யலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இது சிறந்த சிறுதொழிலாகவும் அமையும். மேலும் வீட்டுக்கு தேவையான காய்கறிகளையும் பயிரிடலாம்.

    இயற்கையான காய்கறிகளை, மீதியாக உள்ள இடத்தை பயன்படுத்தி, நமது பார்வையில் வளர்த்து அவற்றை பயன்படுத்தும்போது ஏற்படும் மனத்திருப்தியை தோட்டம் அமைத்த பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். தோட்டம் அமைக்க முதலில் தேவை நல்ல மண். எனவே, இடம் மண்ணை கொட்டுவதற்கு ஏற்றவாறு உள்ளதா..? என்று கவனிக்கவேண்டும்.

    பாதுகாப்பு நடவடிக்கைகள்

    வீட்டுக்கு வெளிப்புறமாக என்றால் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது இல்லை. அல்லது காலி இடம் சிமெண்டு தரை என்றால் கொஞ்சம் முன்னேற்பாடு செய்ய வேண்டியதாக இருக்கும். ஏனெனில், நேரிடையாக மண்ணை சிமெண்டு தரையில் கொட்டுவது கூடாது. மேல்மாடி என்றால் பயிரிடும் போது ஊற்றப்படும் நீர் மேல்மாடியில் இறங்கி பல சிக்கல்களை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவது பாதுகாப்பு.



    பிளாஸ்டிக் பைகள்

    சென்னை போன்ற நகரங்களில் மண் தொட்டிகள் கிடைத்தாலும், அவற்றை கச்சிதமாக பராமரிப்பது கடினம். அதற்கு மாற்றாக Hdpe Grow Bags எனப்படும் ‘பிளாஸ்டிக்’ பை வகைகளை சந்தையில் வெவ்வேறு அளவுகளில் தேவைக்கு ஏற்ப வாங்கி பயன்படுத்தலாம். மேலும், நல்ல தரமான மண் கிடைப்பது சிரமமாக இருந்தால், அதற்கு மாற்றாக தென்னை நார் கழிவு மண்புழு உரம் கலந்து பயன்படுத்தலாம். எடை குறைவாக உள்ள தென்னை நார் கழிவு நன்றாக அழுத்தி, அடைக்கப்பட Hdpe Grow Bags வகைகள் சந்தையில் கிடைக்கிறது. சுலபமாக வாங்கி அவற்றை பயன்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள்

    போதுமான நிலம் மற்றும் மண், தொட்டி அல்லது பிளாஸ்டிக் பை, கொஞ்சம் தண்ணீர் அல்லது வீணாகும் நீரை பயன்படுத்தலாம். வீட்டு குப்பைகளையும் உரமாக போடலாம். கொஞ்சம் விதைகளை கடைகளில் வாங்கலாம் அல்லது சமையலறையில் கிடைக்கும் விதைகளை பயன்படுத்தலாம். பராமரிப்புக்காக தினமும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, கவனிக்க வேண்டும். வீட்டுத்தோட்டம் என்பது சிறிய அளவிலான விவசாயம் என்பதால், அனைத்து வகை பயிர்களையும், காய்கறிகளையும் எளிதாக விளைவித்து அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தலாம்.
    ×