search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hand pain"

    • நம்முடைய முன்னோர்கள் சின்ன சின்ன கை வைத்தியத்தை செய்து உடல் உபாதைகளை நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள்.
    • மருத்துவ குணம் கொண்ட பொருட்களையே உணவிலும் அன்றாடம் சேர்த்து வந்தனர்.

    தலைவலி, கை, கால் வலி, சளி, காய்ச்சல், இருமல், தும்மல் எது வந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆங்கில மருந்தை நாடுகின்றோம். உடல் நிலை சரியில்லாமல் போனால் மருத்துவரை பார்ப்பது தவறு ஒன்றும் கிடையாது. இருப்பினும், சாதாரண உடல் உபாதைகளுக்கு கூட செயற்கையான முறையில் மருந்தை உட்கொண்டிருந்தால் அதன் மூலம் பக்கவிளைவுகள் கட்டாயம் அதிகமாகும். நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் சின்ன சின்ன கை வைத்தியத்தை செய்து, அடிக்கடி வரக்கூடிய சில உடல் உபாதைகளை நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள். அந்த வரிசையில் சின்ன சின்ன கை வைத்தியத்தை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

    நம் முன்னோர்களான பெரியவர்கள் நமது வீட்டிலேயே அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களையே நோய் குணப்படுத்தும் மருந்துகளாக பயன்படுத்தி உள்ளனர். உண்மையில் இந்த பொருட்கள் எல்லாம் நோயை குணப்படுத்தும் மருந்துகள் என்று தெரிந்தே அவற்றை சமையலில் பயன்படுத்தி வந்துள்ளனர். மருத்துவ குணம் கொண்ட பொருட்களையே உணவிலும் அன்றாடம் சேர்த்து வந்தனர். இதனாலேயே நம் பாட்டி, தாத்தாக்கள் பல ஆண்டுகாலம் நலமுடன் வாழ்ந்தனர்.

    வயிற்று வலி குணமாக சிறிதளவு வெந்தயத்தை எடுத்து கொஞ்சம் நெய்யில் வறுத்து பொடி செய்து அதனை புதிதாக செய்த மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி முற்றிலுமாக நீங்கும்.

    தலைவலி நீங்க ஐந்து துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கும், 2 லவங்கமும் சேர்த்து நன்கு அரைத்து பற்று போடும் பதத்தில் வைத்துக்கொண்டு நெற்றியில் பற்று போட்டால் தலைவலி சில மணி நேரங்களில் குணமாகும்.

    நாட்டு மருந்து கடையில் இருந்து கொஞ்சம் வேப்பங்கொட்டையை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக இழைத்து தலையில் பத்து போட்டுக்கொண்டால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் சீக்கிரம் குணமடைந்து விடும்.

    குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ நெஞ்சில் சளி சேர்ந்துகொண்டு இருமல் அதிகமாகிவிடும். இந்த நெஞ்சு சளி கரைய சிறிதளவு தேங்காய் எண்ணையில் பச்சைக் கற்பூரம் கொஞ்சம் சேர்த்து நன்கு சுடவைத்து இளம் சூட்டில் நெஞ்சில் தடவி வர நெஞ்சில் உறைந்துள்ள சளி கரையத்தொடங்கும்.

    பசி எடுக்க புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சை பழம் சாறு 3 பங்கு சேர்த்து கலந்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் உடனடியாக பசி ஏற்படும்.

    வண்டுக்கடியால் ஏற்படு தடிப்புகள் மறைய வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சேர்த்து அரைத்த விழுது ஒரு கைப்பிடி எடுத்து ½ லிட்டர் பசும்பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிட கரப்பான், வண்டுக்கடியால் ஏற்பட்ட விஷம், வடு நீங்கும்.

    மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெய்யில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும். அஜீரண கோளாறு இருக்கும் சமயங்களில் மிளகை வறுத்து பொடி செய்து தேனில் உட்கொண்டு வந்தால் அஜீரண கோளாறால் ஏற்படும் சீதபேதி குணமாகும்.

    உடல் சூட்டினால் ஏற்படும் தொண்டை வலி குணமாக இரவில் தூங்குவதற்கு முன்னர் ஒரு ஸ்பூன் தேன், சிறிதளவு சுண்ணாம்பு இவற்றை உள்ளங்கையில் நன்றாக குழைத்தால் சூடாக இருக்கும். இந்த கலவையை அந்த சூட்டிலேயே தொண்டை பகுதியில் தடவி மறுநாள் காலையில் ஈரத்துணிகொண்டு துடைத்து எடுத்தால் உடல் சூட்டினால் ஏற்படும் தொண்டை வலி குணமாகும்.

    அதிமதுரத்தை பொடியாக்கி அதை ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்க்க வேண்டும். அதனை நன்றாக கலந்து இரவு முழுவதும் வைத்து, மறுநாள் அரிசி கஞ்சியுடன் சேர்த்து, இந்த நீரை குடித்து வர வயிற்று புண் (அல்சர்) குணமாகும். இதனையே கஷாயமாக செய்து குடிக்க மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.

    சிறு குழந்தைகள் சில சமயம் விடாமல் அழும். நமக்கு காரணம் புரியாது. அதற்கு இரண்டு வெற்றிலைகளை எடுத்து, விளக்கெண்ணெய்யை ஒரு பக்கம் தடவி, விளக்கில் லேசாக சூடு செய்து இளம்சூட்டில் குழந்தையின் வயிற்றின் மேல் போட சில நொடிகளில் அழுகை நின்று குழந்தை சிரிக்க ஆரம்பித்து விடும்.

    சிறு குழந்தைகளுக்கு வசம்பை ஒரு துண்டு எடுத்து நல்லெண்ணெயில் ஊற்றி விளக்கில் காட்டி நன்கு கருக்கி அதன் பொடியை சிறிது நாக்கில் தேய்த்துவிட வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், பேதி போன்றவை குணமாகும்.

    தோள், முன்னங்கை மற்றும் அவற்றை சார்ந்த தசைகளை மிக அதிகமாக உபயோகிப்பது மற்றும் தவறான உபயோகம் ஆகியவற்றால் டென்னிஸ் எல்போ வியாதி வருகின்றது.
    தோள், முன்னங்கை மற்றும் அவற்றை சார்ந்த தசைகளை மிக அதிகமாக உபயோகிப்பது மற்றும் தவறான உபயோகம் ஆகியவற்றால் இவ்வியாதி வருகின்றது.

    மணிக்கட்டைச்சுற்றியும் வெளிப்புறமாகவும் வலி ஆரம்பிக்கும், கைகுலுக்கும் போதும் ஏதாவது ஒன்றை பிழியும் போதும், பொருட்களை தூக்கும்போதும், மூடியைத் திறக்கும் போதும் வலி அதிகமாகும்.

    ஆயுர்வேத சிகிச்சை

    மூன்று தோஷங்களும் நிலைமாறுவதால் வரலாம் மூட்டுக்களை தவறான முறையில் உபயோகிப்பதாலும் வரலாம், அடிபடுவதாலும் வரலாம்.

    சிகிச்சை

    மூன்று தோஷங்களையும் சமநிலைபடுத்துவதே இதற்கான சிகிச்சை முறையாகும். மூட்டைத் திரும்பத் திரும்ப உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். நோய் சரியாகும் வரை குறிப்பிட்ட மூட்டு அசையாமல் கட்டி வைப்பது நல்லது. தன்வந்த்ரம் தைலம் உபயோகிக்கலாம்.

    எள், வெந்தயம் ஆகியவற்றை பாலில் வேக வைத்து பத்துபோடலாம். தசமூலசூரணம், பால் இவற்றை கலந்து பத்து போடலாம். முறிவெண்ணை உபயோகித்து கட்டுப் போடலாம். பஞ்சாம்ல தைலம், முறிவெண்ணை, பிண்ட தைலம், ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

    உள்ளே சாப்பிட

    மஹாமஞ்சிஷ்டாதி கஷாயம், தன்வந்த்ரம் கஷாயம், சந்திரபிரபா குளிகா ஆகியவற்றை உள்ளே சாப்பிடலாம்.

    குதிகால் வலி: (வாத கண்டகம் / அஸ்திகிரந்தி)
    குதிகால் எலும்பில் முள்போன்று வளர்வதால் இந்நோய் வருகின்றது.
    கண்டகம் என்றால் முள், எலும்பின் அதிக வளர்ச்சியே இந்நோய்.

    உள்ளே சாப்பிட மருந்து

    குக்குலு திக்தககஷாயம், பஞ்சதிக்தத ஷீரம், எள், கஷாயம் ஆகியவற்றை உள்ளே எடுக்கலாம்.

    வெளியே போட

    பலா அஸ்வந்தாதி தைலம், கொட்ட ஏசுக்காதி தைலம் ஆகியவற்றால் பத்து போடலாம்.புளி இலை/ஆமணக்கு இலையுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, மூட்டை கட்டி, சூடு செய்து கொடுக்கலாம்.

    வீட்டு வைத்தியம்

    செங்கல்லைச் சூடாக்கி அதன்மேல் பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மேல் குதிகாலை வைக்க வேண்டும் முள்போல இருப்பது மழுங்கி விடும்.

    ஆஸ்டியோ மைலைட்டிஸ்

    எலும்பு மஜ்ஜையில் வரும் நோய்தொற்று



    காரணம்

    எலும்பு, எலும்பு மஜ்ஜையில் டி.பி. இருப்பதால் வருவது. குழந்தைகள், பருவ வயதினர்க்கு அதிகம் வரும் நீரிழிவு நோயால் காலில் வரும் புண்கள் மூலம் பரவும் நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தால் வரும்.

    அறிகுறிகள்

    பாதிக்கப்பட்ட இடத்தில் வலி இருக்கும், காய்ச்சல் வரும், பாதிக்கப்பட்ட இடம் நெகிழ்ந்து மென்மையாக இருக்கும்.

    சிகிச்சை

    இந்நோய் பித்த அனுபந்த வாதத்தால் வருகிறது. வீக்கம் பித்தத்தால் வருவதே. ஆகவே பித்தம் குறைய, வாத அனுலோபனம் செய்ய வேண்டும் வாதத்தை அதன் போக்கில் திருப்ப வேண்டும்.

    உள்ளே சாப்பிட

    புனர்னவாதி கஷாயம், பலாகுடூச்சியாதி கஷாயம், தீராயந்த்தாதி கஷாயம், சுகுமாரகஷாயம், சுகுமாரக்ருதம் ஆகியன உள்ளே சாப்பிடலாம்.

    வெளியே தேய்க்க


    மதுயஷ்டியாதி தைலம், ஆரணாளாதி தைலம் ஆகியன வெளியே தேய்க்க கூடியவை.அரிசி கழுவிய தண்ணீரை, புளிக்க வைத்து தாரா செய்யலாம். கரும்புச்சாறு கொண்டும் தாரா செய்யலாம்.

    - டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-2367200, 2313188, 2313194)

    ×