search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gundaru dam"

    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 50 அடியை கடந்த நிலையில் இன்று 52.20 அடியாக உயர்ந்துள்ளது.
    • ராமநதி நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 64 அடியாக உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்றும் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் 2 அணைகளுக்கும் வினாடிக்கு 1,895 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 1,354 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பாபநாசத்தில் 22 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 20 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 20 அடிக்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 95.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் 107.15 அடி நீர் இருப்பு உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 50 அடியை கடந்த நிலையில் இன்று 52.20 அடியாக உயர்ந்துள்ளது. கொடு முடியாறு அணை நீர்மட்டம் நேற்று 28.75 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 34 அடியை எட்டியுள்ளது.

    அதே நேரத்தில் 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் வெறும் 6.75 அடியாகவே உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து எஸ்டேட்டுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலையில் 41 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஊத்து எஸ்டேட்டில் 37 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 33 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 25 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அந்த அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குண்டாறு அணை ஒரு வாரமாக நிரம்பி வழிகிறது.

    அடவிநயினார் நீர்மட்டம் நேற்று 113.75 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி அதிகரித்து 117 அடியை எட்டியுள்ளது.

    ராமநதி நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 64 அடியாக உயர்ந்துள்ளது. குண்டாறு அணையில் மட்டும் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கருப்பாநதியில் 45 அடியை எட்டியுள்ளது. கடனா அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

    • சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.85 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 45.25 அடியாகவும் உள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    செங்கோட்டை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக மாலை நேரங்களில் பரவலாக பெய்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 69.55 அடியாக இருந்தது. இன்று மேலும் 1 அடி உயர்ந்து 70.90 அடியானது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 1,164 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.85 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 45.25 அடியாகவும் உள்ளது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை இல்லை. மாஞ்சோலை வனப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய பணிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வரும் குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    36 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் சுமார் 1,200 ஏக்கர் பாசன பரப்பளவில் ஆண்டுக்கு முப்போக சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. குண்டாற்றை நம்பி சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின்போதும் முதலில் முழு கொள்ளளவை எட்டும் அணையாக குண்டாறு அணை இருந்து வருகிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவகாலத்தின்போது ஒரு முறை அணை நிரம்பிய நிலையில் அதன்பின்னர் மழை பொய்த்து போனதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இந்நிலையில் சில நாட்களாக பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 2-வது முறையாக நேற்று மாலை நிரம்பி வழிந்தது. இதனால் பிசான சாகுபடிக்கான நீர்வரத்து உறுதியான நிலையில் இந்த அணையை நம்பி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனால் தஞ்சாவூர் குளம், செங்கோட்டை பகுதி குளங்கள், நல்லூர், பிரானூர், தென்கால்வாய், மெட்டு, மூன்று வாய்க்கால், பிரானூர், கொட்டாகுளம் பகுதி விவசாயிகள் அதிகளவில் பயனடைவார்கள். கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி அணை நிரம்பியபோது வெளியேறிய உபரிநீர் கிட்டத்தட்ட 28 நாட்கள் வரை வழிந்தோடியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 22 மில்லி மீட்டரும், குலசேகரபட்டினத்தில் 8 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் தொடந்து பெய்துவரும் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.
    • தென்மேற்கு பருவமழை தொடங்க காலதாமதம் ஏற்பட்ட நிலையில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் குண்டாறு அணை நீரின்றி வறண்டு காணப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய பணிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருவது குண்டாறு அணையாகும். ஒருங்கிணைந்திருந்த நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பருவமழையின்போது முதல் முதலில் நிரம்பும் அணை இந்த அணைதான்.

    மிகச்சிறிய அதாவது 36 அடி மட்டுமே கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் அப்பகுதியில் சுமார் 1,200 ஏக்கர் பாசன பரப்பளவில் முப்போக சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. குண்டாறு நீர்த்தேக்கத்தை நம்பி சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நீரினால் தஞ்சாவூர் குளம், செங்கோட்டை பகுதி குளங்கள், நல்லூர், பிரானூர், தென்கால்வாய், மெட்டு, மூன்று வாய்க்கால், பிரானூர், கொட்டாகுளம் பகுதி விவசாயிகள் அதிகளவில் பயனடைவார்கள். கடந்த ஆண்டு இந்த அணை தென்மேற்கு பருவ காலத்தில் முதல் அணையாக நிரம்பி அதன் உபரிநீர் கிட்டத்தட்ட 122 நாட்கள் வரை வழிந்தோடியது.

    இதன்முலம் 11 குளங்கள் நிறைந்ததால் கார் சாகுபடி செழிப்பாக நடைபெற்றது. ஆனால் அதன் பிறகு மழையின் தாக்கம் குறைந்ததால் அணையில் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்க காலதாமதம் ஏற்பட்ட நிலையில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் குண்டாறு அணை நீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் விவசாய பணிகள் தொடங்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடந்து பெய்துவரும் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இன்று காலை குண்டாறு அணையின் நீர்மட்டம் 35 அடியை எட்டியது. இன்னும் அந்த அணை முழு கொள்ளவை எட்ட 1 அடி நீரே தேவை. தொடர்ந்து அணை பகுதியில் மழை பெய்வதால் இன்று மாலைக்குள் அணை நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நேற்று முன்தினம் மாலையில் பாலமுருகன் குண்டாறு அணையில் குளிக்க சென்றார்.
    • அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சகதியில் அவரது கால் சிக்கிக்கொண்டது.

    நெல்லை:

    செங்கோட்டையை அடுத்த கண்ணுப்புளி மெட்டு பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில் சேலம் மாவட்டம் காட்டு வளவு பகுதியை சேர்ந்த பாலமுருகன்(வயது 35) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் தனது மனைவி பிரியாவுடன் அங்கு தங்கியிருந்து தோட்டத்தை பராமரித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பாலமுருகன் குண்டாறு அணையில் குளிக்க சென்றார். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சகதியில் அவரது கால் சிக்கிக்கொண்டது. உடனே அவர் காப்பாற்றும்படி கத்தி கூச்சலிட்டார். ஆனால் அவரால் சகதியில் இருந்து வெளியே மீள முடியாமல் பரிதாபமாக மூழ்கி இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று பாலமுருகன் உடலை போராடி மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்ேகாட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால் முதல் முறையாக குண்டாறு அணை நிரம்பி உள்ளது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    அணை நிரம்பியது

    குறிப்பாக குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைபகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை இன்று காலை நிரம்பி வழிந்தது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால் முதல் முறையாக குண்டாறு அணை நிரம்பி உள்ளது. வழக்கம்போல் மாவட்டத்தில் முதல் முறையாக குண்டாறு நிரம்பி உள்ளதால் அதனை நம்பி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    படகு சவாரி

    அணை நிரம்பியதையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் படகு சவாரி தொடங்கப்பட்டது. அதில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்தனர்.

    மேலும் கார் பருவ சாகுபடியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். சுமார் 600 ஏக்கருக்கும் அதிகமாக நெற்பயிர் நடவு செய்வதற்கு தேவையான பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    ×