search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "guard killed"

    • கடந்த 15 வருடமாக தார மங்கலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காவலாளி யாக பணி புரிந்து வந்தார்.
    • திறந்த வெளி சாக்கடையை கடக்க முயன்ற போது அவர் தவறி விழுந்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள நங்கவள்ளி, வீரக்கல் கீழ் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (55). இவர் கடந்த 15 வருடமாக தார மங்கலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காவலாளி யாக பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி வங்கி முன்பு நகராட்சி சார்பில் தோண்டப் பட்ட திறந்த வெளி சாக்கடையை கடக்க முயன்ற போது அவர் தவறி விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் மேட்டூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    சத்தியமங்கலம்,

    சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்க சாமி (வயது 60). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ரங்கசாமி நேற்று இரவு வேலைக்கு சென்றார். இதையடுத்து அவர் வேலை முடிந்து இன்று காலை 5.45 மணிக்கு வீட்டுக்கு மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது சத்திய மங்கலத்தில் இருந்து பவானிசாகருக்கு ஒரு அரசு டவுன் பஸ் சென்று கொண்டு இருந்தது.

    தொடர்ந்து அவர் சத்திய மங்கலம் பவானிசாகர் ரோட்டில் வந்தார். அப்போது அந்த அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ரங்கசாமி படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் செல்லும் வழியி லேயே ரங்கசாமி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் மீண்டும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பழைய இரும்பு பொருட்கள் கடையில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி இன்று காலை முருகையன் இறந்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 59). இவர் தோட்டப்பட்டு ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் கடையில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று முருகையன் இரவு நேர பணிக்கு வந்தபோது பழைய இரும்பு கடையில் மர்மநபர்கள் திருடிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகையன் அவர்களை தட்டிக்கேட்டார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தாக்கினர். பின்னர் மண்வெட்டியால் வெட்டினர். இதில் முருகையன் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த சமயம் கடையின் உரிமையாளர் ஆனந்த் அங்கு வந்தார். ரத்தவெள்ளத்தில் உயிருக்குபோராடிய முருகையனை தூக்கிக்கொண்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரது நிைலமை மோசமானது. எனவே முருகையன் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முருகையன் இறந்தார்.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கொலைமுயற்சி வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். போலீஸ் தேடுதல் வேட்டையில் 2 பேர் சிக்கினர். விசாரணையில் பிடிபட்ட 2 பேர்தான் முருகையனை கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் தோட்டப்பட்டு பழைய காலனியை சேர்ந்த திவாகரன் (19), நத்தப்பட்டு காலனியை சேர்ந்த ஜின்னா என்கிற தமிழ்வல்லவன் (20) என தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது முருகையன் இறந்து போனதால் 2 பேர் மீது கொலைவழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சரவணம்பட்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற காவலாளி மீது ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேய பரிதாபமாக இறந்தார்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தத்தை சேர்ந்தவர் சூர்யநாராயணன (வயது 61). காவலாளி. இன்று காலை இவர் பட்டேல் ரோடு அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சூர்ய நாராயணன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூர்ய நாராயணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்த காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள விலாங்குறிச்சியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 68). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலைக்கு செல்வதற்காக கணபதியில் இருந்து தனியார் பஸ்சில் ஏறினார்.

    பஸ் ஜி.கே.எஸ்.நகர் பகுதியில் வளைவு பகுதியில் வேகமாக சென்றதாக கூறப்படு கிறது. அப்போது பஸ் படிக்கட்டு அருகே நின்ற அர்ஜூனன் எதிர்பாராத விதமாக பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே பயணிகள் சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தினர். பின்னர் அர்ஜூனனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அர்ஜூனன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பஸ் டிரைவரான அன்னூரை சேர்ந்த லோகேஸ்(24), கண்டக்டர் வடிவேல்(28) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    ×