search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் மோதி காவலாளி பலி
    X

    அரசு பஸ் மோதி காவலாளி பலி

    • ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    சத்தியமங்கலம்,

    சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்க சாமி (வயது 60). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ரங்கசாமி நேற்று இரவு வேலைக்கு சென்றார். இதையடுத்து அவர் வேலை முடிந்து இன்று காலை 5.45 மணிக்கு வீட்டுக்கு மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது சத்திய மங்கலத்தில் இருந்து பவானிசாகருக்கு ஒரு அரசு டவுன் பஸ் சென்று கொண்டு இருந்தது.

    தொடர்ந்து அவர் சத்திய மங்கலம் பவானிசாகர் ரோட்டில் வந்தார். அப்போது அந்த அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ரங்கசாமி படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் செல்லும் வழியி லேயே ரங்கசாமி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் மீண்டும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×