search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government projects"

    • பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் , மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவர்-திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் , மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் பங்கேற்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சிகள் துறை உள்பட பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    குறிப்பாக நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் பூங்கா (திறந்தவெளி காலி இடம்) மேம்பாடு செய்தல், அம்ரூத் திட்டத்தின் கீழ் விரிவடைந்த பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள், கட்டிட மேற்கூரையில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,பிற துறைகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சத்துணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் நியாய விலைக்கடைகள், புதிய மின்னணு குடும்ப அட்டை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டம், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மத்திய அரசு திட்டமானாலும், மாநில அரசு திட்டமானலும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முழு கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சுப்பராயன் எம்.பி., தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், துணை மேயர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தசாமி, கோவிந்தராஜ், உமா மகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நேரு எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து மனு அளித்தார்.
    • ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உருளையன்பேட்டை தொகுதியில் உப்பனாறு மேம்பாலம், அண்ணா திடல் விளையாட்டு மைதானம், நேருவீதி பெரியமார்க்கெட், புதிய பஸ்நிலைய மேம்பாட்டு பணி ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணிகள் அனைத்தும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஸ்தம்பித்து நிற்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு இடையூறாக உள்ளவர்களை அழைத்து பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த சந்திப்பின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், தலைமை செயலர் ராஜீவ்வர்மா, ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரி மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர். இதன்பின் நேரு எம்.எல்.ஏ கூறியதாவது:-

    இந்த திட்டங்கள் தனிப்பட்ட தொகுதி பிரச்சினை கிடையாது. ஒட்டுமொத்த புதுவை மக்களின் பிரச்சினை. எனவே பணிகள் தடைபட காரணமானவர்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசி திட்டத்தை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிகழ்ச்சிக்கு சென்ற என்னை போலீசார் தடுத்தனர். அதை மீறி சென்றதால் வழக்குப்பதிவு செய்தனர். இப்போது அரசு பணிகளை தடுக்கும் தனி நபர்கள் மீது ஏன் வழக்குபதிவு செய்ய மறுக்கிறார்கள்? இவ்வாறு நேரு எம்.எல்.ஏ கூறினார்.

    ×