search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Geetha Govindam"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை ராஷ்மிகா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா. இருவரும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படங்கள் இளம் ரசிகர்களை கவர்ந்தது.


    இதனிடையே ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு பிப்ரவரி மாத துவக்கத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த தகவல் பொய்யானது என விஜய் தேவரகொண்டா விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில் விஜய் தேவரகொண்டா குறித்து நடிகை ராஷ்மிகா மனம் திறந்து பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகா, 'நானும் விஜய்யும் ஒன்றாகதான் வளர்ந்தோம். என்னுடைய வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய்யிடம் ஆலோசனை கேட்டுதான் செய்வேன். நான் என்ன சொன்னாலும் அதற்கு ஆமாம் போடுபவர் கிடையாது விஜய். நல்லது, கெட்டதை அறிந்து சொல்லக்கூடியவர்.


    என் வாழ்வில் எல்லாரையும் விட எனக்கு ஆதரவாக அவர் இருக்கிறார். என் வாழ்க்கையில் அவர் ரொம்ப முக்கியம். உண்மையில் நான் மதிக்கும் ஒரு நபராக விஜய் தேவரகொண்டா உள்ளார்' என்று தெரிவித்து உள்ளார். இவரின் இந்த பேச்சு இவர்களின் காதல் கிசுகிசுக்களுக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா, கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
    • ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன.

    கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான இவர் தற்போது பல மொழிகளிலும் பெரிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


    தெலுங்கில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனிடையே ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டார் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், பிப்ரவரி மாத துவக்கத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன.


    இந்நிலையில், இந்த வதந்திக்கு நடிகர் விஜய் தேவர கொண்டா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, "எனக்கு பிப்ரவரியில் நிச்சயதார்த்தமோ, திருமணமோ நடக்காது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பத்திரிகைகள் விரும்புகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த வதந்தியைக் கேட்கிறேன். இது போன்ற வதந்திகள் மூலம் என்னை திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர்" என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    `கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தானாவுக்கு படவாய்ப்புகள் குவிந்து வருவதால் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணத்தை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #RashmikaMandanna
    ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் பிரபலமான கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் வசூலும் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது.

    இதையடுத்து ராஷ்மிகாவின் மார்கெட்டும் எகிறத் தொடங்கியது. தற்போது அவருக்கு தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணமாக உள்ளது. இந்த நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்த ராஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ராஷ்மிகாவும், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் ‘கிரிக் பார்ட்டி’ படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. பல மாதங்கள் ஆகியும் திருமணம் நடக்கவில்லை. திருமணத்தில் ராஷ்மிகா ஆர்வம் இல்லாமல் இருந்தார். இருவரும் பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கள் வந்தன. அதனை அவர்கள் மறுத்து வந்தார்கள்.



    இந்த நிலையில் திருமணத்தை ராஷ்மிகா நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது நெருங்கிய உறவினர்கள் இதனை உறுதிப்படுத்தி உள்ளனர். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ராஷ்மிகாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. நடிப்பில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதனால் ராஷ்மிகா - ரக்‌ஷித் ஷெட்டி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதுவே திருமணத்தை ரத்து செய்ய காரணம் என்று கூறுகிறார்கள். இவர்களை சேர்த்து வைக்க இருவீட்டு உறவினர்களும் முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்து விட்டது என்கின்றனர். பெற்றோர்களுடன் கலந்து பேசி அவர்கள் சம்மதத்துடன் ராஷ்மிகா திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. #RashmikaMandanna #GeethaGovindam

    விஜய் தேவரகொண்டா ஜோடியாக `கீதா கோவிந்தம்' படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தானாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணத்தை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #RashmikaMandanna
    பிரபல கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா. தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ராஷ்மிகாவும், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. 

    ராஷ்மிகா தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக `கீதா கோவிந்தம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. குறிப்பாக `இன்கெம் இன்கெம்' என்ற பாடல் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூப்பிலும் டிரெண்டிங்கில் உள்ளது.

    இந்த படத்தின் பாடல் வீடியோவில், காதல் காட்சியில் ராஷ்மிகா நெருக்கமாக நடித்து இருந்தார். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இப்படியெல்லாம் நடிக்கலாமா? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சனம் செய்தனர்.



    இந்த நிலையில் ராஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. எனினும் ராஷ்மிகாவின் மானேஜர் ‘‘திருமணம் நின்று போனதாக சொல்வது வதந்திதான்’’ என்று மறுத்து இருக்கிறார். #RashmikaMandanna #GeethaGovindam

    ×