என் மலர்
நீங்கள் தேடியது "Gangster Act"
- ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனார்.
- அதன்பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த பெருங்குடி மேலத்தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (வயது23).
இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
அரித்துவாரமங்கலம் மேல காலனியை சேர்ந்த கார்த்தி (35),சுதாகர் (34), ராஜேந்திரன் (60) ஆகிய 3 பேரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
பின்னர் குண்டர் சட்டத்தில் விக்னேஷ், கார்த்தி, சுதாகர், ராஜேந்திரன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- மதுரை அருகே குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- விசாரணையில் அவர்கள் வழிப்பறி செய்யும் நோகத்தில் சென்றது தெரியவந்தது.
மதுரை
மதுரை திலகர் திடல் போலீசார் பேச்சியம்மன் படித்துறை சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் பெரிய கத்தி ஒன்று இருந்தது. விசாரணையில் அவர்கள் வழிப்பறி செய்யும் நோகத்தில் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த பாசிங்காபுரம் காளியம்மன் கோவில் தெரு, பழனிவேல் மகன் பிரதீப் என்ற சுருட்டை (21), விளாங்குடி, டெம்சி காலனி மணி (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம், பெரிய ரத வீதியைச் சேர்ந்த செல்வம் மகன் தமிழரசன் என்ற தமிழ் (வயது21). திருநகர், இலகுவனார் தெருவை சேர்ந்தவர் சிவா என்ற சிவபிரியன் (28). இவர்கள் 2பேர் மீதும் கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் அவர்கள் மீண்டும் குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதாக தெரியவந்தது. எனவே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி தமிழரசன் என்ற தமிழ், சிவா என்ற சிவப்ரியன் ஆகிய 2பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் அவர்களை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்/
- தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாறன் வலியுறுத்தினார்.
மதுரை
இந்து அமைப்பு சார்பில் மதமாற்று தடைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் பேசியதாவது:-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கருமாத்தூரில் உள்ள கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர்களை தமிழக அரசு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது பானங்களை பயன்படுத்தலாம் என்ற உத்தரவை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும். மதுரை மாவட்டத்தில் நடக்கும் கனிமவள கொள்ளைகளை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






