என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாலியல் தொல்லை கொடுத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
Byமாலை மலர்27 April 2023 8:54 AM GMT
- கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்/
- தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாறன் வலியுறுத்தினார்.
மதுரை
இந்து அமைப்பு சார்பில் மதமாற்று தடைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் பேசியதாவது:-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கருமாத்தூரில் உள்ள கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர்களை தமிழக அரசு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது பானங்களை பயன்படுத்தலாம் என்ற உத்தரவை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும். மதுரை மாவட்டத்தில் நடக்கும் கனிமவள கொள்ளைகளை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X