search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers affected"

    • விவசாயிகளும் என்ன செய்வதென்று தெரியாமல், வேதனையடைந்து வருகின்றனர்.
    • நடப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குடிமங்கலம்:

    உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் காய்கறி பயிர்களில் சின்னவெங்காயம் பிரதானமாக உள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் நாற்று நடவு முறை மற்றும் நேரடியாக காய் நடவு முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதிகளில் பிரதான சாகுபடியாக சின்ன வெங்காயம் இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நோய்த்தாக்குதல், விலை சரிவு, சாகுபடி செலவினம் என பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்டதால் நடப்பு பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.

    இப்பகுதிகளில் ஏறத்தாழ 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது.சாகுபடியில் விதைப்பு பருவத்தில் மழை குறைந்தது, தொடர்ந்து பெய்த அதிக பனிப்பொழிவு, கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களினாலும், களைக்கொல்லி, பூச்சி மருந்துகள் உள்ளிட்ட இடு பொருட்கள் குறித்து தொழில் நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்காத நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகளும் என்ன செய்வதென்று தெரியாமல், வேதனையடைந்து வருகின்றனர். வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 7 முதல் 8 டன் வரை மகசூல் இருக்கும் நிலையில் நடப்பாண்டு 4 டன் மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது.

    ஒரு சில பகுதிகளில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், ஒட்டுமொத்த வெங்காய பயிரும் கருதி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளை நிலங்களில் 20 முதல் 25 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

    சின்ன வெங்காயம் சாகுபடியில் சீதோஷ்ண நிலை மாற்றம், தரமற்ற இடு பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 70 முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில் நடப்பாண்டு கடுமையான பனிப்பொழிவு, வெயில், மழையில்லாதது என சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மகசூல் குறைந்துள்ளதோடு விலையும் குறைவாக உள்ளது. பல இடங்களில் வெங்காயம் பயிர் கருகி வீணாகியுள்ளது. இதனால் நடப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உடுமலை பகுதிகளில் ஆண்டு தோறும் சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. அதே போல் தக்காளி, புடலங்காய், அவரைக்காய், பாகற்காய் என பந்தல் சாகுபடியிலும், மஞ்சள் தேமல் நோய் உள்ளிட்ட காரணங்களினால் பாதிப்புகள் ஏற்படுவதோடு விளைபொருட்களுக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை.

    மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  

    ×