search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drivers strike"

    • மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என டிரைவர்கள் போராட்டம் அறிவித்தனர்.
    • இதனால் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    சென்னை:

    மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தால் அதிக பாதிப்பு ஏற்படும் என டிரைவர்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் மகாராஷ்டிரா மாநிலத்தில், முன்னெச்சரிக்கை காரணமாக வாகனங்களில் முழுமையாக எரிபொருளை நிரப்பிக் கொள்ள பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களுக்கு படையெடுத்துள்ள நிலையில் உள்ளனர். இதனால் கடும் கூட்டம் கூடி வரும் நிலையில் எரிபொருள் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நாசிக்கில் டேங்கர் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றால் பெட்ரோல் நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்படும் என அந்த மாவட்டத்தின் பெட்ரோல் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு வராது என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தகவல் தெரிவித்துள்ளார்.

    வட மாநிலங்களில் லாரி டிரைவர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது. சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என தெரிவித்தனர்.

    • தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்புரத்தில் தனியார் எண்ணை நிறுவன சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.
    • தச்சநல்லூரில் பெட்ரோல், டீசல்கள் சேமித்து வைக்கப்பட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    நெல்லை:

    தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்புரத்தில் தனியார் எண்ணை நிறுவன சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.

    இங்கு பெட்ரோல், டீசல்கள் சேமித்து வைக்கப்பட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    தினமும் 138 டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல்கள் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக மாநகரின் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஸ்ரீபுரம்- ஊருடையார்புரம் சாலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் வாகனங்களில் செல்வோர் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே உடனடியாக அந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என டேங்கர் லாரி டிரைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஸ்ரீபுரம்- ஊருடையார்புரம் சாலையை உடனடியாக சீரமைக்க கோரி டிரைவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் டேங்கர் லாரிகள் சாலைகளில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்ததும் மாநகராட்சி உதவிசெயற்பொறியாளர் லெனின் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது டிரைவர்கள் கூறும்போது, சாலை பணிகள் நடைபெறுவதால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மாற்றுபாதை வழியாக செல்ல வேண்டி உள்ளது. அப்படி செல்லவேண்டும் என்றால் நகர பகுதி வழியாக செல்லவேண்டும். அப்போது போலீசார் எங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் நகர்பகுதி வழியாக செல்லும் போது போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு சில நேரங்களில் விபத்து அபாயமும் நிகழ்கிறது.

    எனவே உடனடியாக ஸ்ரீபுரம்- ஊருடையார்புரம் சாலையை சீரமைக்க வேண்டும் என கூறினர்.

    தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    கால்டாக்சி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்டோ, வேன் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம்:

    காஞ்சீபுரம் அருகே கால் டாக்சி டிரைவர் ராஜேஷ் என்பவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் தன்னை போக்குவரத்து போலீசார் திட்டியதால் தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அதேபோல் தமிழகம் முழுவதும் வாடகை கார் ஓட்டும் டிரைவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டு வருகிறார்கள் எனவே இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கார், வேன், ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன்படி விழுப்புரத்திலும் வாடகை கார், ஆட்டோ, வேன் ஓட்டுபவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, விழுப்புரம் புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஆட்டோ, கார் மற்றும் வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பழைய பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். 

    இதேபோல் தியாகதுருகத்தில் நேரு கார் ஓட்டுநர்கள் சங்கம், பகவத்சிங் ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர்சங்கம், அம்பேத்கர் டெம்போ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், அண்ணா மினி டெம்போ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கத்தை சேர்ந்தவர்களும் வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சின்னசேலத்திலும் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 
    ×