search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "repair roads"

    • மாநகராட்சியின் பெரும்பாலான வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
    • இந்த சாலையில் பயணித்து வந்ததற்கு வாழ்த்துக்கள் என கூறி அவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை, கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்காக பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. இதனால் மாநகராட்சியின் பெரும்பாலான வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    இதில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கிடையே பயணிக்கின்றனர். இதனை சீரமைக்க கோரி பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாளை கே.டி.சி.நகர் மங்கம்மாள் சாலைக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை பெய்த திடீர் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

    இதனை சீரமைக்க கோரி 37-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வக்கீல் அன்புஅங்கப்பன் என்பவர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிள், கார் வழியாக வந்த பயணிகளிடம் இந்த சாலையில் பயணித்து வந்ததற்கு வாழ்த்துக்கள் என கூறி அவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    • தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்புரத்தில் தனியார் எண்ணை நிறுவன சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.
    • தச்சநல்லூரில் பெட்ரோல், டீசல்கள் சேமித்து வைக்கப்பட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    நெல்லை:

    தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்புரத்தில் தனியார் எண்ணை நிறுவன சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.

    இங்கு பெட்ரோல், டீசல்கள் சேமித்து வைக்கப்பட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    தினமும் 138 டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல்கள் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக மாநகரின் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஸ்ரீபுரம்- ஊருடையார்புரம் சாலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் வாகனங்களில் செல்வோர் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே உடனடியாக அந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என டேங்கர் லாரி டிரைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஸ்ரீபுரம்- ஊருடையார்புரம் சாலையை உடனடியாக சீரமைக்க கோரி டிரைவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் டேங்கர் லாரிகள் சாலைகளில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்ததும் மாநகராட்சி உதவிசெயற்பொறியாளர் லெனின் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது டிரைவர்கள் கூறும்போது, சாலை பணிகள் நடைபெறுவதால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மாற்றுபாதை வழியாக செல்ல வேண்டி உள்ளது. அப்படி செல்லவேண்டும் என்றால் நகர பகுதி வழியாக செல்லவேண்டும். அப்போது போலீசார் எங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் நகர்பகுதி வழியாக செல்லும் போது போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு சில நேரங்களில் விபத்து அபாயமும் நிகழ்கிறது.

    எனவே உடனடியாக ஸ்ரீபுரம்- ஊருடையார்புரம் சாலையை சீரமைக்க வேண்டும் என கூறினர்.

    தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    ×