search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டிரைவர்கள் போராட்டம்: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது
    X

    டிரைவர்கள் போராட்டம்: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது

    • மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என டிரைவர்கள் போராட்டம் அறிவித்தனர்.
    • இதனால் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    சென்னை:

    மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தால் அதிக பாதிப்பு ஏற்படும் என டிரைவர்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் மகாராஷ்டிரா மாநிலத்தில், முன்னெச்சரிக்கை காரணமாக வாகனங்களில் முழுமையாக எரிபொருளை நிரப்பிக் கொள்ள பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களுக்கு படையெடுத்துள்ள நிலையில் உள்ளனர். இதனால் கடும் கூட்டம் கூடி வரும் நிலையில் எரிபொருள் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நாசிக்கில் டேங்கர் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றால் பெட்ரோல் நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்படும் என அந்த மாவட்டத்தின் பெட்ரோல் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு வராது என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தகவல் தெரிவித்துள்ளார்.

    வட மாநிலங்களில் லாரி டிரைவர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது. சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என தெரிவித்தனர்.

    Next Story
    ×