search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharun Ayyasamy"

    ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். GKVasan #DharunAyyasamy #AsianGames2018
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹரியானா வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றிருப்பதும், தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பதும் வாழ்த்துக்குரியது. பாராட்டுக்குரியது.

    தருண் அய்யாச்சாமி 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அதுவும் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 49 வினாடிக்கும் குறைவாக ஓடி, தேசிய சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் நமது தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி என்பது பெரிதும் பாராட்டுக்குரியது.


    உலக அளவில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக வெற்றி பெற்றிருப்பதும், சாதனை நிகழ்த்தியிருப்பதும் தமிழர்களுக்கும், இந்திய நாட்டிற்கும் பெருமையாக இருக்கிறது.

    மத்திய மாநில அரசுகள் பதக்கங்கள் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை செய்வதும், ஊக்கத் தொகை கொடுப்பதும், விருதுகள் வழங்குவதும், பாராட்டுவதும் சாலச்சிறந்தது.

    தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, வெள்ளிப்பதக்கம் வென்ற தருண் அய்யாச்சாமி தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட்டு உலக அளவில் மென்மேலும் பல்வேறு விருதுகளை பெற்று சிறந்து விளங்கி தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #GKVasan #DharunAyyasamy #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு ஊக்கத்தொகையாக 30 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018 #AyyasamyDharun #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய வீரர்களின் அபார திறைமையால் தங்கம், வெள்ளி, வெங்கலம் என இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிகின்றன.

    ஆசிய போட்டியில் வென்று பதக்கம் பெற்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு 30 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அறிக்கையில், வெற்றி வீரர் தருண் அய்யாசாமி கடந்த 2016-ம் ஆண்டு போட்டியில் தங்கம் வென்றதையும் சுட்டிக்காட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு பாராட்டு கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தருணின் வெற்றிக்கு பெருந்துணையாக இருந்த அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்ட முதல்வர், தருண் அய்யாசாமியின் எதிர்கால வெற்றிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஸ்குவாஷ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் சவரல் கோஷல், தீபிகா கார்த்திக், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு தலா 20 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #AyyasamyDharun #TNCM #EdappadiPalaniswami
    விவசாயி மகன் ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்ததை எண்ணி ராவுத்தர் பாளையம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #AsianGames2018 #DharunAyyasamy
    திருப்பூர்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராவுத்தர் பாளையத்தை சேர்ந்த தருண் (21) வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

    தருணின் தந்தை அய்யாசாமி. விவசாயி. தாயார் பூங்கொடி. இவர் திருப்பூர் மாவட்டம் கணியாம்பூண்டியில் உள்ள மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    தருண் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 4-ம் வகுப்பு படிக்கும் போது அவருடைய தந்தை அய்யாசாமி இறந்து விட்டார்.

    தாயார் பூங்கொடி அரவணைப்பில் தருண் படித்து வருகிறார். விடா முயற்சியின் காரணமாக தற்போது ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். இது குறித்து தருண் கூறியதாவது-

    எனக்கு 8 வயதாக இருக்கும் போது தந்தை இறந்து விட்டார். தாயார் எனக்காக நிறைய தியாகம் செய்து இருக்கிறார். அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.


    தற்போது அவர் ஆசிரியையாக வேலை பார்த்து மாதத்துக்கு ரூ. 14 ஆயிரம் தான் சம்பாதித்து வருகிறார். எனது தாயாருக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன்.

    சிறந்த திறனை வெளிப்படுத்தி பதக்கம் வென்றதன் மூலம் அரசு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய போட்டியாளர்கள் பற்றி சிந்திக்காமல் எனது ஓட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.

    எனது தேசிய சாதனை நேரத்தை விட சிறப்பான நேரத்தில் பந்தயத்தை முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 6 மாதங்களாக போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் பயிற்சி பெற்றது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    6-ம் வகுப்பு படித்த போதே தடகள வீரராக உருவெடுத்த தருண் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். பிளஸ்-2 படிக்கும் போது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டிகளில் பங்கேற்று வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.

    தருண் தாய் பூங்கொடி கூறும் போது, தருண் விடா முயற்சியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டான். எங்களை சந்திக்க வருவதை கூட குறைத்து கொண்டு பயிற்சி மேற்கொண்டான். ஆசிய விளையாட்டு போட்டிக்கு செல்லும் முன் தங்கம் எப்படியும் வென்று விடுவேன் என்று உறுதியாக கூறி சென்றான்.

    400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்ட போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதும் மிகவும் சந்தோசம் அடைந்தேன். தருணின் தீவிர பயிற்சிக்கு கிடைத்த வெற்றி இது. எனது பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்து என்னிடம் வாழ்த்து கூறிய போது மிகவும் சந்தோசமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தருணுக்கு சத்யா (19) என்ற தங்கை உள்ளார். விவசாயி மகன் ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்ததை எண்ணி ராவுத்தர் பாளையம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அவர்கள் தருணுக்கு பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.  #AsianGames2018 #DharunAyyasamy
    ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் தருண் இந்த வெற்றியை தனது தாயாருக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். #AsianGame2018 #DharunAyyasamy
    ஜகர்தா:

    ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் தருண் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார். விவசாயியான இவரது தந்தை அய்யாசாமி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அங்குள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்க்கும் அவரது தாயார் பூங்கொடி தான் தருணையும், அவரது தங்கை சத்யாவையும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் வளர்த்து வருவதுடன், விளையாட்டில் இருவருக்கும் ஊக்கமும் அளித்து வருகிறார்.

    பதக்கம் வென்ற பிறகு தருண் அளித்த பேட்டியில், ‘எனக்கு 8 வயதாக இருக்கையில் தந்தை இறந்து விட்டார். தாயார் எனக்கான நிறைய தியாகம் செய்து இருக்கிறார். அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். தற்போதும் அவர் ஆசிரியையாக வேலை பார்த்து மாதத்துக்கு ரூ.14 ஆயிரம் தான் சம்பாதித்து வருகிறார். தற்போது எனது தாயாருக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன். சிறந்த திறனை வெளிப்படுத்தி பதக்கம் வென்றதன் மூலம் அரசு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய போட்டியாளர்கள் பற்றி சிந்திக்காமல் எனது ஓட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எனது தேசிய சாதனை நேரத்தை விட சிறப்பான நேரத்தில் பந்தயத்தை முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 6 மாதங்களாக போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் பயிற்சி பெற்றது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது’ என்று தெரிவித்தார்.  #AsianGame2018 #DharunAyyasamy
    ஆசிய விளையாட்டு போட்டியின் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கம் வென்றார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங்கில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தின் இறுதிச் சுற்று நடைபெற்றது.

    இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தருண் அய்யாசாமி, சந்தோஷ் குமார் தமிழரசன் ஆகியோர் இந்தியா சார்பில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்கள். இவர்களுடன் மேலும் 6 பேர் கலந்து கொண்டனர்.



    இதில் தருண் அய்யாசாமி 48.96 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த வெள்ளிப் பதக்கம் வென்றார். இது அவருடைய சிறந்த ஓட்டமாகும்.

    கத்தார் வீரர் அப்தேரஹ்மான் சம்பா 47.66 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீரர் சந்தோஷ் குமார் 49.66 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த 5-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
    ×