search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "daughter killed"

    திண்டுக்கல் அருகே மகளை கொன்ற தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமணி (வயது32). இவரது மனைவி முனீஸ்வரி (27). இவர்களுக்கு சந்தோஷ் (7) என்ற மகனும், ஹர்சவர்த்தினி (5) என்ற மகளும் உள்ளனர்.

    கணவன்-மனைவி 2 பேரும் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு பெரியவர்கள் தம்பதியை சமரசம் செய்து வைத்தனர். இருந்தபோதும் பிரச்சினை தொடர்ந்து கொண்டே போனது.

    கணவன்-மனைவி 2 பேரும் மில் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை முனீஸ்வரியின் தாய் வீட்டில் விட்டு செல்வது வழக்கம். நேற்று இரவு வேலை முடிந்து வந்த தங்கமணி மற்றும் முனீஸ்வரி ஹர்சவர்த்தினியை மட்டும் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    வீட்டில் நுழைந்ததும் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த தங்கமணி அருகில் இருந்த சுத்தியலை எடுத்து முனீஸ்வரியின் தலையில் பயங்கரமாக தாக்கினார். இதில் அவர் நிலைகுலைந்து போனார். மனைவி இறந்து விட்டதாக நினைத்த தங்கமணி அவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    குழந்தையை விட்டு சென்றால் கஷ்டப்படும் என எண்ணிய தங்கமணி மகள் என்றும் பாராமல் ஹர்சவர்த்தினியின் கழுத்தை அறுத்தார். இதில் அந்த குழந்தை துடிதுடித்து இறந்தது.

    பின்னர் தூக்குபோட்டு தங்கமணி தற்கொலை செய்து கொண்டார். முனீஸ்வரியின் முனங்கல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அவர்கள் முனீஸ்வரியை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முனீஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தங்கமணி மற்றும் ஹர்சவர்த்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    குடும்ப பிரச்சினையில் மகளை கொன்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம் அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான அவரது தாய், கள்ளக்காதலை கணவரிடம் தெரிவித்ததால் மகளை கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஆத்தூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் சிங்கபூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா காந்தி (வயது 24). இவர்களது மகள் ஷிவானி(5).

    நேற்று முன்தினம் இரவு பிரியங்கா காந்தி சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலுப்பநத்தம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் மகள் ஷிவானியை தள்ளி விட்டு கொன்றார்.

    இது தொடர்பாக போலீசார் பிரியங்கா காந்தியை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்றதை ஒப்புக் கொண்டார்.

    பிரியங்கா காந்திக்கு பஸ் கண்டக்டர் குமார் மற்றும் ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன் பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்ற கால் டாக்சி டிரைவர் ஆகியோருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

    கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் கள்ளக்காதல் மோகத்தில் பிரியங்காகாந்தி 2 பேரிடமும் மாறி, மாறி உல்லாசமாக இருந்து வந்தார். கள்ளக் காதலர்களுக்கு உல்லாசமாக இருப்பதற்கு அவர் பணமும் கொடுத்து வந்தார்.

    வெங்கடேசனுடன் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் பிரியங்கா காந்திக்கு தொடர்பு ஏற்பட்டது. கள்ளக் காதலனை சந்திப்பதற்காக அவர் அடிக்கடி குழந்தை ஷிவானியுடன் சேலம் வந்தார். பின்னர் கொண்டப்ப நாயக்கன்பட்டியில் உள்ள வெங்கடேசன் வீட்டில் 2 பேரும் ஜாலியாக இருந்து வந்தனர்.

    கள்ளக்காதலனை குழந்தைக்கு சித்தப்பா என்று அறிமுகம் செய்து வைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தையிடம் செல்போனை கொடுத்து விட்டு வெங்கடேசனுடன் பிரியங்கா காந்தி உல்லாசமாக இருந்தார்.

    அப்போது வெளிநாட்டில் இருந்து சங்கர் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது குழந்தை ஷிவானி அந்த போனை எடுத்து பேசியது. குழந்தையிடம் அவர் எங்கே இருக்கிறாய் ? என கேட்டார். அதற்கு தான் சித்தப்பா வீட்டில் இருப்பதாக ஷிவானி கூறினார். அம்மா செல்போனில் அவருடன் மணிக்கணக்கில் பேசி முத்தம் கொடுப்பதாகவும் கூறினார்.

    இதையறிந்த பிரியங்கா காந்தி தனது கள்ளக்காதலை கணவரிடம் சொல்லியதால் ஆத்திரம் அடைந்து குழந்தையை கிணற்றில் வீசி கொன்று, கொள்ளை போனதாக நாடகம் ஆடியது தெரியவந்தது. இந்த விவரங்களை பிரியங்கா காந்தி வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    போலீசார், பிரியங்கா காந்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.

    அந்தியூர் அருகே விஷ உணவு கொடுத்து 2 மகள்களை பலியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தந்தையும் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி செங்குளத்தை சேர்ந்தவர் சிக்கரன் (வயது 37). கூலி தொழிலாளி.

    இவரது மனைவி பெயர் சிக்கரா (32). இவர்களுக்கு சுதா (15), மேகலா (10) என்ற மகள்கள் இருந்தனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே சிக்கரனும், சிக்கராவும் பிரிந்தனர். சுதாவும், மேகலாவும் சிக்கரனுடன் வளர்ந்தனர்.

    சுதா முகாசி புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பும், மேகலா அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் உண்டு உறைவிட பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். 2 பேரும் விடுதியில் தங்கி படித்தனர்.

    சிக்கரன் தீராத நோய் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.இதனால் மன வேதனை அடைந்த சிக்கரன் நோயால் தான் இறந்துவிட்டால் தனது மகள்கள் அவதிப்படுவார்களே என்று என எண்ணினார்.

    இந்த நிலையில் விடுதிகளில் இருந்து சுதாவையும், மேகலாவையும் அழைத்து வந்தார். பின்னர் 3 பேரும் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கொல்லம ரத்தான் கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு சிக்கரன் உணவில் வி‌ஷம் கலந்து மகள்களுக்கு சாப்பிட கொடுத்தார். சிக்கரனும் வி‌ஷம் கலந்த உணவை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் 3 பேரும் மயங்கி விழுந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே மேகலா பரிதாபமாக இறந்தார்.

    மேல் சிகிச்சைக்காக சுதாவும், சிக்கரனும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியில் சுதாவும் பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கரனுக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சிக்கரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே கணவரின் 2வது மனைவியின் மகளை கொடூரமாக கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் யூரி பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் அகமது. இவர் ஏற்கனவே உள்ளூரை சேர்ந்த பக்மீதா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவர் மூலம் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் முஸ்தாக் அகமது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இன்னொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். அவர் மூலம் 9 வயது பெண் குழந்தை உள்ளிட்ட குழந்தைகள் இருந்தன.

    முஸ்தாக் அகமது 2-வது மனைவி வீட்டிலேயே அதிகமாக தங்குவது வழக்கம். மேலும் 2-வது மனைவியின் மகள் மீது தான் அதிக பாசம் காட்டி வந்தார்.

    இது முதல் மனைவி பக்மீதாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே இந்த சிறுமியை தீர்த்து கட்ட திட்டமிட்டார். கடந்த மாதம் 23-ந்தேதி சிறுமியை நைசாக பேசி பக்மீதா அங்குள்ள காட்டுக்கு அழைத்து சென்றார்.

    தனது மகன் ‌ஷகீல் மற்றும் அவரது நண்பர்கள் கெய்சர் அகமது (வயது 19), நசீர் அகமது கான், ஆசிக் அகமது ஆகியோரை காட்டு பகுதியில் பதுங்கி இருக்க சொல்லி இருந்தார். சிறுமியை அங்கு அழைத்து சென்றதும் அவளை 4 பேரும் கற்பழிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

    சகோதரி என்றும் பாராமல் ‌ஷகீல் முதலில் கற்பழித்தார். பின்னர் மற்ற 3 பேரும் கற்பழித்தனர். இதைத்தொடர்ந்து பக்மீதா அந்த சிறுமியின் கழுத்தை நெரித்தார். அப்போது ‌ஷகீல் கோடாரியை எடுத்து சிறுமி தலையில் வெட்டினார். இதில் அந்த இடத்திலேயே அவள் இறந்துவிட்டாள். அவளது இரு கண்களையும் ‌ஷகீல் தோண்டி எடுத்தான்.

    பின்னர் 5 பேரும் சேர்ந்து சிறுமி மீது பேட்டரியின் ஆசிட்டை ஊற்றி தீவைத்தனர். உடல் அரைகுறையாக எரிந்த நிலையில் அங்குள்ள புதருக்குள் வீசினார்கள். பின்னர் மர தழைகளை போட்டு மூடிவிட்டு சென்று விட்டனர்.

    மகளை காணாமல் முஸ்தாக் அகமது போலீசில் புகார் கொடுத்தார். 10 நாட்களாக தேடிவந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அவரது உடல் அழுகிய நிலையில் காட்டு பகுதியில் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவள் கற்ழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    முதல் மனைவி பக்மீதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தியதில் நடந்த முழு கதையையும் போலீசாரிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவரையும் மற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    ×