search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Children's Day Celebration"

    • புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியின் குழந்தைகள் தின விழா முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மழலையர்கள் தேசத் தலைவர்களை போன்று மாறுவேடமிட்டு பார்வையாளர்கள் அனை வரையும் கவர்ந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியின் குழந்தைகள் தின விழா முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார் . தலைமை விருந்தினராக குற்றப் புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மழலையர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

    சிறப்பு விருந்தினராக டாக்டர் ரத்தினவேல் காமராஜர் கலந்து கொண்டு மழலையர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மழலையர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவி த்தார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மழலையர்கள் தேசத் தலைவர்களை போன்று மாறுவேடமிட்டு பார்வையாளர்கள் அனை வரையும் கவர்ந்தனர். பின்பு அனைவருக்கும் இனிப்பு மற்றும் எழுதும் உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆசிரியர்கள் லட்சுமி பிரியா , மகாலட்சுமி , சோனியா , சித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் அளவில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கிடையான ஓவியம், மாறுவேடம், கதை சொல்லுதல், தேச பக்தி பாடல்கள், வினாடி வினா, கட்டுரை, கவிதை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது.

    அதன் பரிசளிப்பு விழா செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் நளினி தலைமை தாங்கினார். செய்யாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எல்லப்பன், தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட தலைவர் ஆசிரியர் ஜி. செல்வதிருமால் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக ஓ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றி குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வழக்கறிஞர் ஜி அசோக், ஒன்றிய கவுன்சிலர் ஞானவேல், தலைமை ஆசிரியர்கள், ஜே.ஆர்.சி. ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர்திரளாக கலந்து கொண்டனர்.

    • மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக நடனம், நாடகம்,பட்டிமன்றம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பள்ளியின்தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர்செகண்டரி பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின்தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். பள்ளி ஆசிரியை ரஞ்சிதா வரவேற்று பேசினார்.

    மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக நடனம், நாடகம்,பட்டிமன்றம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து மாணவர்களை மகிழ்வித்தனர்.குழந்தைகளை கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் பள்ளியின்முதல்வர் பிரமோதினி சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவர் மன்றத்தினை சேர்ந்த மாணவி கீர்த்தனா நன்றி கூறினார். இந்நிழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின்ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் கலை நிகழ்ச்சிஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • பல்வேறு போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடந்தது
    • மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த வேலூர் பேட்டை கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதனையொட்டி பள்ளி மாணவ-மாண விகளுக்கு பல்வேறு போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.

    வேலூர் பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சஞ்சிவ் குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மரம் நடுதலின் அவசியம், பிளாஸ்டிக் ஒழிப்பு, போக்சோ சட்டம், குழந்தை தொழிலாளர் தடை, குழந்தை திருமண தடை, அரசு நலத்திட்ட உதவிகள் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • மாறுவேட போட்டிகள் நடந்தது
    • குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் இன்னர்வீல் சங்கம் இணைந்து குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சி கள்ளூர் குறிஞ்சி நகர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம், சீவூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத் தலைவர் டி.அஜீஸ், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஷாயிதாஅல்தாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குடியாத்தம் இன்னர்வீல் சங்கத் தலைவர் கீதாலட்சுமி, செயலாளர் பிரியா, முன்னாள் தலைவர் வசந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

    தொடர்ந்து மாறுவேட போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

    முடிவில் குடியாத்தம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம்ரிஹானா நன்றி கூறினார்.

    • விழாவில் மாணவர்களின் பட்டிமன்றம், ஆசிரியர்களின் நகைச்சுவைநாடகம் மற்றும் நடனம் நடைபெற்றன.
    • விழாவில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்ததினம் குழந்தைகள் தின விழாவாக திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளி வெள்ளிவிழா கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின்முதல்வர் பிரியா ராஜா வரவேற்று பேசினார்.விழாவில் மாணவர்களின் பட்டிமன்றம், ஆசிரியர்களின் நகைச்சுவைநாடகம் மற்றும் நடனம் நடைபெற்றன. குழந்தைகள் நேரு போலவே வேடமிட்டு வந்து உற்சாகமாக கலந்துகொண்டனர். மேலும், பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் குழந்தைகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். விழாவின்நிறைவாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதா பானு நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×